Daily Manna 248

என் வார்த்தை அக்கினியைப் போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா: 23:29 எனக்கு அன்பானவர்களே! இந்த புதிய மாதத்தின் முதலாவது பரிசுத்த ஓய்வு நாளை காணச் செய்த இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஜார்ஜ் மத்தேசன் என்ற ஆங்கிலேயர் தமது 18-ஆம் வயதில் பார்வைக் குறைவுக்கு ஆளானார். சிறிது சிறிதாக அவரது பார்வை மங்கிக் கொண்டே வந்தது. ஒருநாள் தனது பார்வை…

Daily Manna 247

இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் இரக்கம் பெறுவார்கள். மத்தேயு:5:7 எனக்கு அன்பானவர்களே! இரக்கத்தில் ஐஸ்வரியமுள்ளவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு போதகரிடம் ஒரு வாலிபன் வந்து, “ஐயா, நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். யாரும் எனக்கு எந்த உதவியும் செய்வதில்லை. யாரும் என்னிடத்தில் அன்பு பாராட்டவில்லை. யாரும் என்னை கைத்தாங்கி உயர்த்தி விட முன் வரவில்லை” என்று துக்கத்தோடு சொன்னான். அந்த போதகர் அவன் மேல் மிகவும் இரக்கம் பாராட்டி, “தம்பி,…

Daily Manna 246

ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். ஆதியாகமம் :4:4 ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். ஆதியாகமம் :4:4^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். “காணிக்கை” என்றதுமே அநேகருடைய இருதயத்தில் குழப்பமும், முகத்தில் மாறுதலும் ஏற்படுகின்றது; சபைகளிலும் இது பல கேள்விகளை எழுப்புகிறது. ஆதியிலிருந்தே தேவனுக்குக் காணிக்கை கொடுப்பது என்பது மனிதனுக்குக் குழப்பத்தை ஏற்படுத்திய விஷயமாகவே இருந்து வருகிறது. முதன் முதல் தேவனுக்குக் காணிக்கை கொடுத்தவர்கள் ஆதாமின்…

Daily Manna 245

இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? ஏசாயா 43 :19 எனக்கு அன்பானவர்களே! புதியவைகளை வாழ்வில் நடப்பிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நம்முடைய கர்த்தர் சகலவற்றையும் புதிதாக்குகிறவர். நம்முடைய ஆண்டவர் செய்கிற ஒவ்வொரு காரியமும் எப்போதும் புதிதாகவும், ஆச்சரியமானதாகவும் இருக்கும். ஆகவே தான் அவர் சொல்லுகிறார் நான் வனாந்தரத்தில் வழியையும் அவாந்தரவெளியில் ஆறுகளையும் உண்டாக்குவேன். பொதுவாக வனாந்தரத்தினுடைய மிகக்…

Daily Manna 244

கர்த்தர் காயினை நோக்கி; உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. ஆதியாகமம்: 4:9-10 எனக்கு அன்பானவர்களே! சொந்த இரத்தத்தால் நம்மை மீட்டெடுத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். உலகத்தில் இது வரை எத்தனையோ மகாத்துமாக்கள், அறிஞர்கள் மற்றும் தலைவர்களின் இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது. அதினாலே, ஜனங்களுக்குப் பாவ நிவிர்த்தியோ, எந்த விதமான புண்ணியமோ ஏற்பட்டதில்லை. அதற்குப் பதிலாக பகையும், கலகமும், விரோதங்களும், பிரிவினைகளும் தான் ஜனங்கள்…

Daily Manna 243

உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக. சங்கீதம் :70 :4 எனக்கு அன்பானவர்களே! மனமகிழ்ச்சியை தருகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருவர் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு தொழிற்சாலை ஒன்றை நிறுவினார், ஒரு சில வருடங்களில் பெரிய செல்வந்தனாகி விட்டார். ஆனால் அவருடைய உள்ளத்தில் சந்தோஷமில்லை. எப்பொழுதும் பதட்டமும், தன்னை மற்றவர்கள் ஏமாற்றி விடுவார்களோ என்கிற பயமும் அவரை வாட்டி வதைத்தன. தொழிற்சாலையின் நெருக்கடிகள் அவருடைய இருதயத்தில்…