Daily Manna 104

செல்வம் என்றைக்கும் நிலையாது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ? நீதிமொழி:27 :24

எனக்கு அன்பானவர்களே!

நிலையான ஒரே செல்வமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

மனித வாழ்க்கைக்கு பணம் அத்தியாவசியத் தேவை.எவ்வளவு தான் குணம் இருந்தாலும் பணம் தேவையாக இருக்கிறது.

பணத்தைப் பற்றிச் சொல்லும் போது “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே”,
“பணம் பாதாளம் வரை பாயும்”.
“பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும்” என்பார்கள்.

ஒரு செல்வந்தரும் ஞானியும் பேசிக் கொண்டிருந்த போது செல்வந்தர் கூறினார்,” செல்வம் எந்த வழியில் வேண்டுமானாலும் வரலாம் என்று சொன்னார்”.

உடனே ஞானி, அப்படி சொல்லாதே “செல்வம் நேரான வழியில் தான் வரவேண்டும்”என்று கூறிவிட்டு ஒரு டம்ளர் பாலை குடிக்க கொடுத்தார்.

அவனும் குடித்து விட்டு, இதென்ன மண்ணெண்ணெய் வாடை வருகிறது என்று கேட்டான்.

உடனே ஞானி, அதை அடுப்பில் வைத்துக் காய்ச்சினால் மண்ணெண்ணெய் வாடை வராது. நான் சிம்னி விளக்கில் வைத்துக் காய்ச்சினேன்.
பால் ஒன்று தான் ஆனால் நான் காய்ச்சிய முறைதான் வேறு.

அது போலவே செல்வம் ஒன்று தான். ஆனால் வருகிற முறை தான் வேறு.
செல்வம் நேரான வழியில் வந்தால் தான் அது நம்மோடு கூட இருக்கும்.அது நமக்கு மகிமையை தரும்.

பணம் என்பது கடல் நீர் போன்றது. குடிக்க குடிக்கத் தாகத்தை அதிகம் ஆக்குவதே அதன் தன்மை!

“அநியாயமாக கதவின் வழியாக வரும் செல்வம், ஜன்னல்களின் வழியாக வெளியே செல்லுகிறது” என்று எகிப்து நாட்டில் பழமொழி.

பணம் கடல் நீர் போன்றது.அளவாய் பயன்படுத்துவோம். வளமாய் வாழ்வோம்

வேதத்தில் பார்ப்போம்,

வேலை செய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும், செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவெட்டாது.
பிரசங்கி 5:12.

அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடுண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம்.
பிரசங்கி 5:13.

பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே: இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்.
நீதிமொழி: 1:19.

பிரியமானவர்களே,

‌‌ ‌ பாருங்கள், “பணம், பாம்புக்கு ஒப்பானது. அதில் நஞ்சும் உண்டு, மருந்தும் உண்டு” என்று இமாம் கஸாலி அவர்கள் 800 ஆண்டுகளுக்கு முன்பு கூறினார். எல்லாம், முறையாக பயன்படுத்தினால் வாழ்வு தான்.

பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப் பிரியன் செல்வப் பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே பிரசங்கி:5:10;6:1,2. என்று கூறுகின்றார்.

பணம் தேவையை திருப்தியாக்குவதில்லை. தேவையை அதிகரிக்கும். எந்த ஒரு செல்வந்தனும் தனக்கு இருக்கிறது போதும் என திருப்பியடைந்ததை நாம் கண்டதில்லை.
பணம் மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும்.

இப்படி மனுஷன் வாயை கட்டி வயிற்றை கட்டி சம்பாதிப்பதை பல நேரங்களில் அவன் அனுபவிப்பதில்லை.
எனவே அதுவும் மாயையாய் இருக்கிறது என்று வேதம் கூறுகிறது .

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள் 1தீமோத்தேயு:6:10,11.

நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்த குணத்தையும் அடையும்படி நாடு [1தீமோத்தேயு:6:10,11.என்று பவுல் கூறுகின்றார்.

நாம் சம்பாதிக்கும் செல்வம் நிலையற்றது. நிலையான செல்வம் நம் இயேசு ஒருவரே. எனவே தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் பண ஆசையினால் விசுவாச வாழ்க்கையை விட்டு விலகாமல் தேவனுடைய குணாதிசயங்களை சம்பாதிக்கும் படி நாடுவோம்.

வேதம் கூறுகிறது போதுமென்ற மனதுடன் கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். பண ஆசை கொண்ட சகேயுவை ஒருநாள் இயேசு சந்தித்தார். பண ஆசை போனது. இரட்சிப்பை கண்டு கொண்டான்.

இரட்சிப்பை பெற்றுக் கொண்ட நாம் விசுவாசத்திலிருந்து நம்மை விலக செய்யும் பணஆசையை உதறி தள்ளிவிட்டு நல்ல போராட்டத்தை போராடி நித்திய ஜீவனுக்கென்று ஓடுவோம்.

நிலையான செல்வமாகிய இயேசு கிறிஸ்துவை பற்றிக் கொள்வோம்.அவர் தருகிற ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்வோம்.
ஆமென்.

Similar Posts

  • Daily Manna 226

    அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள். ஆதியாகமம்: 19 :26 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். குஜராத்தில் பூஜ் என்ற இடத்தில் சில வருடங்களுக்கு முன் பூகம்பம் ஏற்பட்டு வீடுகளெல்லாம் அழிந்து போயின.விழுந்து நொறுங்கிப் போயிருந்தன. அதன் வீடுகளருகே குடிசைப் போட்டு கொண்டு, புழுதியாய் கிடக்கும் வீட்டையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த மக்களின் அவல நிலையை பார்த்த ஒருவர் கூறுகின்றார். அதை பார்க்க அத்தனை…

  • Daily Manna 150

    Who is alive without death? மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கி விடுகிறவன் யார்?. சங்கீதம் :89 :48 மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கி விடுகிறவன் யார்?. சங்கீதம் :89 :48. ~~~~~~~ எனக்கு அன்பானவர்களே! மரணத்தையும் பாதாளத்தையும் வென்றவராகிய இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஹாரி கௌடினி என்றொரு மனிதர் இருந்தார். 1874…

  • Daily Manna 162

    உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக் கொள்வீர். ஏசாயா: 26 :3. உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக் கொள்வீர்.ஏசாயா: 26 :3.=========================எனக்கு அன்பானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு முறை ஒரு குரு தன்னுடைய சீடர்களுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். போகிற வழியில், ஒரு பெரிய ஏரி…

  • Daily Manna 201

    குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே 1 பேதுரு 1:19 குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே 1 பேதுரு 1:19.=========================எனக்கு அன்பானவர்களே! நம்மை மீட்டெடுத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இங்கிலாந்து தேசத்திலிருந்து அனேக பிரிட்டீஷ்காரர்கள் செல்வந்தர்களாகும் படி அமெரிக்காவிற்கு சென்றார்கள். இதில் ஒரு ஏழை மனுஷனும் இருந்தான். அவன் அமெரிக்காவிற்கு சென்று பெரிய பணக்காரனாக…

  • Daily Manna 67

    மனுஷ கொலை பாதகனெவனோ அவனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள். 1 யோவான் 3 :15 எனக்கு அன்பானவர்களே! பாடுபடும் தாசனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஜேம்ஸ் ஹானிங்டன் இங்கிலாந்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். படிப்பை முடித்த பின் ஒரு வங்கியில் பணியாளராக இருந்தார். பின்னர் இறையியலைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமுள்ளவராக இறையியல் கல்லூரியில் சேர்ந்து படித்தார். பின்னர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிவிக்கும் நற்செய்தி…

  • Daily Manna 32

    உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும், சங்: 25:3 அன்பானவர்களே, பொதுவாக “காத்திருப்பது” என்பது மிகவும் கடினமான நேரம் தான். எனினும், காத்திருப்பதை நினைத்து சோர்ந்து போகாதிருங்கள். பொறுமை எப்போதும் நற்பலனையே கொண்டுவரும். ஏற்ற நேரத்தில் கர்த்தர் உங்களுக்கு நீதி செய்வார். ஆகவே, நம்பிக்கை இழக்காமல் ஆண்டவரையே நோக்கிப் பாருங்கள். அவசரப்பட்டு தேவனுடைய சித்தத்திற்கு மாறாக செயல்பட ஒருபோதும் இடம் கொடுத்து விடாதீர்கள். அது பல வேதனைகளையும், இழப்புகளையும் கொண்டு வந்துவிடும். நீங்கள் நீண்ட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *