Daily Manna 142

என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன். யோவான்:14:2

எனக்கு அன்பானவர்களே!

கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு வழிபோக்கன் ஒருவன் பிரயாணப்பட்டு, வெகு தூரமாய் சென்று கொண்டிருந்தான். இரவு நெருங்கி விட்டது. பகலெல்லாம் அவன் நடந்ததால் அவனுக்கு களைப்பு ஏற்பட்டது. எங்கேயாவது ஓய்வெடுத்தால் நலமாயிருக்கும் என்று அவன் எண்ணினான்.

சற்று தூரத்தில் ஒரு பெரிய வீட்டை கண்டான். அதன் பெரிய முற்றத்திலே பெரிய பெரிய திண்ணைகள் கட்டப்பட்டிருந்தன. வெளியில் வந்த வீட்டுக்காரரிடம் தன் பயணத்தை கூறி அன்றிரவு மட்டும் இந்த திண்ணையில் ஓய்வெடுத்து கொள்கிறேன் என்று கேட்டான்.

அதைக் கேட்ட அந்த வீட்டுக்காரர், ‘ இது என்ன சத்திரமா? போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாரும் தங்கி போகவா இதை கட்டி போட்டிருக்கிறோம்’ என்று கத்தினார். வழிபோக்கர் அமைதியாக, ‘ஐயா இந்த பங்களாவை யார் கட்டியது?’ என்று கேட்டார்.

‘என் தாத்தா கட்டினார். அதன் பின் என் அப்பா இதில் வாழ்ந்தார். இப்போது நான், எனக்கு பிறகு என் மகன் வாழ்வான்’ என்று பெருமிதத்தோடு கூறினார். ‘அப்படியானால் இது சத்திரம் தானே’ என்று வழிபோக்கர் நாசுக்காக கூறினார்.

“உலகம் ஒரு நாடக மேடை” என்றார் ஒருவர். குறிப்பிட்ட காலம் வரை நமது கதாபாத்திரத்தை நடித்து விட்டு, செல்ல வேண்டியது தான். இப்பூமியில் கோடி கோடியாய் செலவிட்டு, ஆசை ஆசையாய் கட்டிய அந்த சொகுசு வீட்டில் கொஞ்ச காலம் தான் வாழ முடியும்.

இறந்த பிறகு அந்த வீட்டில் ஒரடி நிலமும் கூட தரமாட்டார்கள் நமது பிள்ளைகள்! மகன்{மருமகன்} ஊதாரியோ, குடிகாரனோ, நல்லவனோ யாராயிருந்தாலும் அவனுக்கு விட்டு விட்டுத் தான் செல்ல வேண்டும்.

நமது ஆயுள் எத்தனை காலம், என்று நம்மில் யாருக்கும் தெரியாது. இப்படிப்பட்ட நிலையற்ற உலகில் வாழும் நமக்கு, இதன் பேரில் தான் எத்தனை, எத்தனை பற்று! எத்தனை பெருமைகள்!

இவைகள் நம்முடன் என்றுமே வராது.எல்லாம் அழிவுள்ளது.
மாறக்கூடியது.

வேதத்தில் பார்ப்போம்,

அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன்படும் , அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன்படும் பிரயாசத்துக்கு முடிவில்லை; அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அநுபவியாமல் யாருக்காகப் பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை.
பிரசங்கி:4:8

எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.
1 கொரிந்தி:15 :58.

இதோ உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச் செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே இவன் பங்கு.
பிரசங்கி 5 :18.

பிரியமானவர்களே,

நம்மிடம் அனேர், இந்த உலகம் நமக்கு நிரந்தரமானது என்பது போல், தன் வாயை கட்டி, வயிற்றை கட்டி சொத்து மேல் சொத்து சேர்த்து குவித்து கொள்கிறார்கள்.

எவ்வளவு பணம் சேருகிறதோ அவ்வளவுக்கு அதன் மேல் அவர்களுக்கு மயக்கமும், ஆசையும் ஏற்படுகிறது.
, அவர்களுக்கு இன்னும், இன்னும் சேர்த்து வைக்க வேண்டும் என்ற வாஞ்சையால் அவர்கள் பேச்சும், செயல்களும் அதிகமாய் இருக்கும்.

உலகத்தின் எல்லா காரியங்களும் மாயையானது. நம்முடைய ஆஸ்தி, அந்தஸ்து, ஞானம்,சம்பத்து, ஐசுவரியம், புகழ், பொருள், மூடநகைப்பு, வெற்றி, அங்கீகாரம் எல்லாம் நிலையற்றது.

வேதம் கூறுகிறது, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாதவன் கர்த்தருடைய கூடாரத்திலே தங்குவான்; அவருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்.

வீண் மாயைகளைப் பற்றிக் கொள்ளாமல் கர்த்தரையே நம்பியிருப்போம். தேவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து பரலோக வாழ்வுக்கு நேராக நம்மை வழிநடத்துவாராக.

ஆமென்.

Similar Posts

  • Daily Manna 241

    விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். எபிரேயர்: 11:6 எனக்கு அன்பானவர்களே! விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு குடும்பத்தினர் நாய் ஒன்றை ஆசையாய் வளர்த்தார்கள். அந்த நாய்க்கு ‘கேப்டன்’ என்று பெயர் சூட்டினார்கள். குடும்பத்தில் ஒருவர் போல அந்த நாயும் இருந்தது. மிகவும் செல்லமாக வளர்த்தார்கள். திடீரென்று அந்தக் குடும்பத் தலைவருக்கு வியாதி வந்து மரித்துப் போனார். எல்லாரும் அழுது புலம்பினார்கள். இந்த நாயை…

  • Daily Manna 221

    நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். மத்தேயு: 7 :1. எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் ஒரு மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒரு முறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும்…

  • Daily Manna 170

    இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. 1 கொரிந்தியர் :13:13 இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. 1 கொரிந்தியர் :13:13==========================எனக்கு அன்பானவர்களே! அன்பின் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு பெண் அவசர அவசரமாக கிளம்பி வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது, அங்கு மூன்று வயதான ஞானிகளை போன்ற மனிதர்கள், திண்ணையில் அமர்ந்திருப்பதை கண்டாள்….

  • Only those who are obedient to the Lord can defeat Satan

    Only those who are obedient to the Lord can defeat Satan வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; 1 பேதுரு 2 :18. ========================== எனக்கு அன்பானவர்களே! யாவருக்கும் மேலானவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். அவன் மிகுந்த செல்வந்தனாயிருந்தான். ஆனால் அவன் சரியான கஞ்சனாயிருந்தான். எனவே, அவனுக்கு முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன் ஒருநாள்…

  • Daily Manna 271

    என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. சங்கீதம்: 51:3. எனக்கு அன்பானவர்களே! ‌பரிசுத்தமாக்குகிற பரமன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு மனிதர் ஒரு குதிரையை பாசமாக வளர்த்து வந்தார். அந்த குதிரை தன் எஜமான் சொல்வதை கேட்டு அவருக்கு உதவியாக இருந்து வந்தது. ஒரு நாள் அது பின்னால் இருந்த வேலியை எட்டி உதைத்ததினால் அதன் கால்களில் புண் உண்டானது. அதைக்…

  • Daily Manna 168

    அவர் என்னைச் சோதித்த பின் நான் பொன்னாக விளங்குவேன்.” யோபு :23:10. அவர் என்னைச் சோதித்த பின் நான் பொன்னாகவிளங்குவேன்.” யோபு :23:10.=========================எனக்கு அன்பானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பொன்னை விரும்பாத மனுஷனே இல்லை என்று சொல்லாம். அரசனானாலும், ஏழையானாலும் எவராலும் போற்றக் கூடியதுமான இந்தப் பொன், விலையுயர்ந்ததும், தரத்தில் உயர்ந்ததுமாகும். இவ்வுலகில் மட்டுமல்ல, நாம் அனைவரும் வாஞ்சிக்கும் பரலோகத்தின் வீதி கூட சுத்த பொன்னினால் வெளி.21:21…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *