Daily Manna 215

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம்: 1:2

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம்: 1:2.
~~~~~~~~
எனக்கு அன்பானவர்களே!

வேதத்தின் வழியில் நம்மை நடத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு முறை டி.எல்.மூடி என்ற பக்தன் சொன்னார், “நீங்கள் வாலிப வயதில், வேதத்தைத் தூக்கிச் சுமந்தால் வயதான நாட்களிலே, வேதம் உங்களை தூக்கிச் சுமக்கும்.
வேதம் உங்களைப் பாவத்துக்குத் தூரப்படுத்தும். நீங்கள் வேதத்தின்படி நடவாவிட்டால், பாவம் உங்களை வேதத்துக்குத் தூரப்படுத்தும்.”
என்றார்.

உலகத்தை அசைத்த தேவனுடைய மனுஷனாகிய பில்லிகிரகாம் சொன்னார், “இந்த உலகத்தில் ஒரு பாக்கியமான வாழ்வு வாழும் படி கர்த்தர் எனக்கு உதவி செய்தார்.அதன் காரணம் இந்த வேத புத்தகமே” என்றார்.

அவர் வேதாகமத்தைத் திரும்பத் திரும்ப, ஆராய்ந்து படித்தவர். நாலாயிரத்திற்கும் மேற்பட்ட பிரசங்கங்களை, வேத வசனத்திலிருந்து ஆயத்தம் செய்தவர்.

இன்று தம் முதிர்வயதில், வாலிபருக்கு தமது பாக்கியமான வாழ்வின் இரகசியத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

வேதத்தை ஆராய்ந்து பாருங்கள். உங்களைப் பாக்கியசாலிகளாய் மாத்திரமல்ல, நற் குணசாலிகளாகவும் மாற்றும்.

“பெரோயா பட்டணத்தார் மனோ வாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக் கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால்,
தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும், நற்குணசாலிகளாயிருந்தார்கள்” என்று
அப்போஸ்த:17:11-ல் வாசிக்கிறோம்.

தேவப் பிள்ளைகளே,
நீங்களும் நற்குணசாலி என்ற நற்சாட்சி பெற வேண்டாமா? வேதத்தைத் தினந்தோறும் ஆராய்ந்து பாருங்கள்.

வேதத்தை வாசிப்பதினால், நமக்குக் கிடைக்கும் இன்னொரு மிகப் பெரிய ஆசீர்வாதம், கனி கொடுக்கும் வாழ்க்கையாகும்.

கனி கொடுத்த வாழ்க்கை வாழ்ந்த தாவீது ராஜா சொல்லுகிறார்: “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்”
சங்கீதம். 1:2,3.என்று கூறுகின்றார்.

வேத வசனங்களை வாசிக்கிறதும் பாக்கியம், வாசிக்கிறதைக் கேட்கிறதும் பாக்கியம், எழுதியிருக்கிறவைகளைக் கைக் கொள்ளுகிறதும் பாக்கியம்
(வெளி. 1:3). வேதத்தை அனுதினமும் வாசித்து நமக்கு தேவன் வைத்திருக்கும் சிறந்த வாழ்வை சுதந்தரித்துக் கொள்ளுவோம்.

வேதத்தில் பார்ப்போம்,

அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.
சங்கீதம் :37 :31.

உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்.
சங்கீதம்: 119 :92.

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
சங்கீதம்: 19:7.

பிரியமானவர்களே,

வேத வசனங்களை அனுதினமும் வாசித்து தியானித்து அதின்படி நடக்கும் போது கனி கொடுக்க முடியும்.

நாம் தினந்தோறும் எவ்வளவோ வேத வசனங்களை, செய்திகளை கேட்கிறோம். எத்தனை வசனங்கள் நம் இருதயத்திற்குள் செல்கின்றன?

எத்தனை வசனங்களுக்கு நாம் கீழ்ப்படிகிறோம்? சற்று சிந்தித்து பார்ப்போம்.வேதம் கூறுகிறது நல்ல நிலத்தில் விழுந்த விதை சிலது நூறாகவும், அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தந்தது.

நிலம் நம்முடைய இருதயம். விதை தேவனுடைய வசனம். நல்ல நிலமாகிய இருதயத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருவான்.

நாம் வசனத்தை கேட்கிறதால் தியானிக்கிறதால் அல்ல; அதனை உணர்ந்து நம் இருதயம் கீழ்படியும் போது நல்ல கனிகளை கொடுக்க இயலும்.

வேதம் கூறுகிறது எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
[எபிரெயர்:6:7].

பூமி எப்படியாய் தன் மேல் விழுகிற மழை நீரை உறிஞ்சுகிறதோ அதேப் போல வேத வசனங்களை நம்முடைய இருதயம் உறிஞ்சி ஏற்றுக் கொண்டு,அதனை உணர்ந்து அதின் படி வாழும் போது நாமும் கனி கொடுக்கிறவர்களாய் மட்டுமல்ல தேவனுடைய ஆசீர்வாதத்தையும் பெறுவோம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

“வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே”
யோவான் 5:39
என்று வேதம் கூறுகிறது.

ஆம் நித்திய ஜீவனை அடையும் படி ஒவ்வொரு நாளும் வேத வசனத்தை வாசிப்பதோடு, அதன் படி வாழவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.

Similar Posts

  • Daily Manna 165

    கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன்; மத்தேயு: 33:37. கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன்;மத்தேயு: 33:37.***********எனக்கு அன்பானவர்களே! பறந்து காக்கும் பட்சிகளை போல நம்மை காத்து வழிநடத்தி வருகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில்…

  • Daily Manna 127

    உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. லூக்கா 17 :3 எனக்கு அன்பானவர்களே! மன்னிப்பின் மகுடமாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருமுறை இந்திய எல்லைப் பகுதிக்கு பாதுகாப்புக்காக செல்லும் இந்திய வீரர் தன் சகோதரரோடு வாட்சப்பில் பேசி அனுப்பிய சம்பாஷணைகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. அவர் தன் தம்பியிடம், “தம்பி நாம் இருவரும் ஒரே வயிற்றில் பிறந்த பிள்ளைகள் தான்,…

  • Daily Manna 147

    தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான். நீதிமொழி: 28 :13 எனக்கு அன்பானவர்களே, பாவங்களை நீக்கி பரிசுத்த வாழ்வு வாழ செய்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். அமெரிக்கா தேசத்தில் ஒரு இளைஞனுக்கு கொலை செய்த குற்றத்திற்காக நீதிபதி தூக்குத் தண்டனையை கொடுத்தார்.ஒரு குறிப்பிட்ட நாளில் இவனை தூக்கில் போட வேண்டும் என்று ஒரு நாளையும் குறித்திருந்தார். இதனை…

  • Daily Manna 259

    மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார். யாத்திராகமம் 1:21 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நர்ஸ் ( செவிலியர்) என்னும் ஒற்றை வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்களை நாம் கொடுப்பதுண்டு. சிலருக்கு அது ஒரு வேலை. சிலருக்கு அது இலட்சியம். இன்னும் சிலருக்கு அது ஒரு பயிற்சிக் களம். மருத்துவக் கட்டிலில் படுத்திருப்பவர்களுக்கோ அவர்கள் தான் கடவுளின் வாரிசுகள். “ஸ்டெதஸ்கோப் போட்ட தேவதைகளே நர்ஸ்கள்”…

  • Love Your Enemies

    Love your enemies and pray for those who persecute you. உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்‌ பண்ணுங்கள். மத்தேயு 5:44 *********** எனக்கு அன்பானவர்களே! ஒப்புரவாக்குதலின் தேவனாகிய இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இரண்டு சகோதரர்கள் ஒரு கிராமத்தில் விவசாயிகளாக இருந்தார்கள். இருவருக்கும் பக்கத்து பக்கத்தில் வீடு இருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் அன்புடன் பழகி வந்தனர். 40 வருடங்களாக அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள்…

  • Daily Manna 124

    நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் :136 :23 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு பெரிய பங்களாவில், அதன் உரிமையாளரும் அவரது பேரக் குழந்தைகளும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தப் பெரியவரின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. “தாத்தா! குழம்பு காரமாக இருக்கிறதா?” என்று கேட்டனர் விபரம் தெரியாத குழந்தைகள்.தாத்தா அவர்களிடம், “என் அன்பு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *