Daily Manna 109

வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு. நீதி 19 :14 எனக்கு அன்பானவர்களே! பூரண அழகுள்ளவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இரு நண்பர்கள் தொலைக் காட்சியிலே திரைப்படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் வந்த நடிகையைப் பார்த்து ஒருவன் சொன்னான், ‘இவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள், இவளை நான் திருமணம் செய்து கொண்டால் என் வாழ்க்கையே சொர்க்கம் போலாகிவிடும்’ என்றான். இன்று…

Daily Manna 108

மோசம் போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். 1 கொரி15 :33 எனக்கு அன்பானவர்களே! இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். “ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே” என்பது பழமொழி. இதற்கு மனித வரலாற்றில் பல ஆதாரங்கள் உண்டு. நமது ஆதி தாயாகிய ஏவாள், தன் வீழ்ச்சிக்கு, தன் கணவனின் வீழ்ச்சிக்கு, மட்டுமல்ல மொத்த மனித இனத்தின் வீழ்ச்சிக்கே காரணமானாள். ஏன் என்றால்? முதலாவது, ஏவாள் சாவைத் தரும் உரையாடலில் ஈடுபட்டாள்.“அப்பொழுது…

Daily Manna 107

நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமை செய்கிறார்கள்; என் ஆத்துமா திக்கற்றுப்போகப் பார்க்கிறார்கள். சங்கீதம் 35 :12 அன்பானவர்களே, நன்மைகளை தருபவராம் நம் அருமை இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு சலவைத் தொழிலாளியிடம் ஒரு நாயும்,ஒரு கழுதையும் இருந்தது. ஒரு நாள் சலவைத் தொழிலாளி ராத்திரி களைப்போடு தூங்கி கொண்டிருக்கும் போது , வீட்டிலுள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன் வந்து விட்டான். சலவைத் தொழிலாளி நடப்பது…

Daily Manna 106

நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன். 1 கொரி 14 :15 எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டிலுள்ள ஒரு பிரபல ஊழியக்காரரிடம் ஒரு வாலிபனை கொண்டு வந்தார்கள். அவனோடு வந்தவர்கள் அந்த ஊழியக்காரரிடம் ஐயா இந்த வாலிபன் பொது இடத்தில் உங்களை தூஷித்ததினால் திடீரென்று பேச முடியாமல் ஊமையாகி போனான் என்றனர்….

Daily Manna 105

சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்: பொறாமையோ எலும்புருக்கி. நீதி14:30 எனக்கு அன்பானவர்களே, இறைமகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பொறாமைஇல்லாத மனிதன் இவ்வுலகத்தில் இல்லை என்று சொல்லும் அளவிற்குப் பொறாமை குணம் பெரும்பாலான மக்களிடம் குடி கொண்டிருக்கிறது. நம்முடைய மகிழ்ச்சியை கெடுக்கும் தன்மை பொறாமை குணத்திற்கு உண்டு. நெருப்பு விறகை எரிக்கிறது. இரும்பில் இருக்கும் துரு தான் இரும்பு கருக்குகிறது. இது போன்று நம் உள்ளத்தில் எழக் கூடிய தீய எண்ணங்களாகிய…

Daily Manna 104

செல்வம் என்றைக்கும் நிலையாது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ? நீதிமொழி:27 :24 எனக்கு அன்பானவர்களே! நிலையான ஒரே செல்வமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். மனித வாழ்க்கைக்கு பணம் அத்தியாவசியத் தேவை.எவ்வளவு தான் குணம் இருந்தாலும் பணம் தேவையாக இருக்கிறது. பணத்தைப் பற்றிச் சொல்லும் போது “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே”,“பணம் பாதாளம் வரை பாயும்”.“பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும்” என்பார்கள். ஒரு செல்வந்தரும் ஞானியும் பேசிக் கொண்டிருந்த…