Daily Manna 67

மனுஷ கொலை பாதகனெவனோ அவனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள். 1 யோவான் 3 :15 எனக்கு அன்பானவர்களே! பாடுபடும் தாசனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஜேம்ஸ் ஹானிங்டன் இங்கிலாந்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். படிப்பை முடித்த பின் ஒரு வங்கியில் பணியாளராக இருந்தார். பின்னர் இறையியலைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமுள்ளவராக இறையியல் கல்லூரியில் சேர்ந்து படித்தார். பின்னர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிவிக்கும் நற்செய்தி…

Daily Manna 66

மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; பிரசங்கி 4:4 எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இயேசுவின் பெரும்பாலான சீடர்கள் கலிலேயா ஊரை சேர்ந்தவர்கள். நாத்தான்வேல் என்பவர் கானாவைச் சேர்ந்தவர். இயேசுவின் சீடர்களில் ஒருவரான நாத்தான் வேல் இந்தியாவின் வடமேற்குப் பகுதி வரை வந்து இறைபணி ஆற்றியதாக சொல்லப்படுகிறது. அதன்பின்னர் ஆசியா மைனரில் சிலகாலம் பணியாற்றினார். அங்குள்ள ஏராப்போலி என்னுமிடத்தில்…

Daily Manna 65

மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்து, ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதி முன் வாருங்கள். சங்கீதம் 100:2 எனக்கு அன்பானவர்களே! ஆராதனையின் நாயகராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நம்மில் அனேகர் இன்று ஞாயிற்றுக் கிழமையா? ஆராதனையில் நான் தவறாமல் சர்ச்சுக்கு போய் விடுவேன்” என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறோம். ஆனால், சர்ச்சுக்குப் போனதும் பைபிளை வாசிப்பதைக் கவனமாக கேட்கிறோமா? அல்லது பிரசங்கத்திற்கு செவிமடுக்கிறோமா? அங்கே, ஆராதனை நடந்து கொண்டிருக்க, நாம்…

Daily Manna 64

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். 2 கொரிந்தி:5 :21 எனக்கு அன்பானவர்களே! நம்மை மீட்டெடுக்க தம் ஜீவனையே தந்த நம் அருமை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்..சென்னையிலுள்ள ஒரு மருத்துவ ஆய்வு நிறுவனம் விஷக் காய்ச்சலுக்காக ஒரு மருந்தை கண்டுபிடித்தனர். முதலில் விஷக் காய்ச்சலுக்கு காரணமான கிருமிகளை குதிரையின் உடலில் செலுத்தினர். குதிரையின் உடலில் இயற்கையாகவே, அந்த வைரல் தொற்றை தடுக்கும்படியாக…

Daily Manna 63

அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது. லூக்கா 22:44 எனக்கு அன்பானவர்களே! சிலுவைமரணம் மிக மிகக் கொடியது. சிலுவையில் அறையப்படும் மனிதன் உடனடியாக மரிப்பதில்லை. பல நாட்கள் கூட சிலுவையில் தொங்கி தாங்கமுடியாத வேதனைகளை அனுபவித்து மரிப்பார்கள் . மேலும் சிலுவையில் தொங்கும் மனிதன் வேதனை தாங்க முடியாமல், சிலுவையில் அறைந்தவர்களை சபிப்பார்கள். தூஷண வார்த்தைகளால் திட்டுவார்கள், வேதனையின் அகோரத்தினால்சப்தமிடுவார்கள். ஆனால் நம் இயேசுவோ, சிலுவையில் மிக…

Daily Manna 62

அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந் துளிகளாய்த் தரையிலே விழுந்தது. லூக்கா 22:44. எனக்கு அன்பானவர்களே! ஜெபம் மறவா நேசராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். சிலுவை மரணம் மிக மிகக் கொடியது. சிலுவையில் அறையப்படும் மனிதன் உடனடியாக மரிப்பதில்லை. பல நாட்கள் கூட சிலுவையில் தொங்கி தாங்க முடியாத வேதனைகளை அனுபவித்து மரிப்பார்கள். மேலும் சிலுவையில் தொங்கும் மனிதன் வேதனை…