Daily Manna 240

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். கலாத்தியர்: 6:2.

எனக்கு அன்பானவர்களே!

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

மிசிசிபி மாகாணத்தில் வேகமாக ஓடும் ஒரு ஆறு உண்டு. அதனருகில் பழங்குடி மக்கள் சிலர் குடியிருந்தார்கள்.

அந்த ஆற்றில் நீச்சல் தெரிந்தவர்கள் கூட கவனமின்றி குளித்தால் அவர்களை அந்த ஆறு இழுத்து செல்லும் அபாயம் உண்டு.

ஒரு முறை வேற்று பழங்குடி இனத்தவர்கள் இவர்களை தாக்கினார்க்ள. இவர்கள் தப்பி ஓடுவதற்கு வழி எதுவும் இல்லை. ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.
அடித்து செல்லும் ஆற்றை எவ்வாறு கடப்பது என திகைத்து நின்றனர்.

கடைசியில் ஒரு காரியத்தை கண்டு பிடித்தனர். பலவீனர்களை பலசாலிகள் தங்கள் தோள்களில் வைத்து கொண்டார்கள். சிறு பிள்ளைகளையும், வியாதியஸ்தர்களையும், வயதானவர்களையும் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு இரண்டு மூன்று பேராக கரம் கோர்த்து ஆற்றை கடந்தார்கள்.

ஆற்றின் வழியாக அவர்கள் தட்டு தடுமாறி நடந்த போது ஒரு காரியத்தை கண்டு பிடித்தார்கள். யாருடைய தோளில் பாரம் அதிகமாக இருந்ததோ, அவர்களால் ஆற்றில் கால் ஊன்றி நிற்க முடிந்தது.

கர்த்தருடைய வேதம் கூறுகின்றது. இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு கூறுகின்றார்.
அப்20:22.

மற்றவர்களுக்கு உதவ முன்வராத வர்களுக்கு ஆற்றை கடப்பது அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஏனென்றால் எடை அதிகமாக அதிகமாக அவர்களால் எளிதாக நடக்க முடிந்தது. பிறர் பாரத்தை சுமப்பதால் இப்படிப்பட்ட நன்மமைகள் கூட இருக்கிறது.

1 தெச 5 :14.
திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.என்று
நமது அருமை ஆண்டவர் கூறுகின்றார்.

இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள். நீங்கள் எதை செய்தாலும் அது உங்களுக்கும் செய்யப்படும் என்றார்.

வேதத்தில் பார்ப்போம்,

அவனவன் பெற்ற வரத்தின் படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்து கொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்.
1 பேதுரு :4 :10

பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.
ரோமர்: 12:13.

எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவி செய்து உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவிர்த்தியாக்கும்.
சங்கீதம் :79 :9.

பிரியமானவர்களே,

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க வேண்டுமென்பது கிறிஸ்துவின் பிரமாணம் ஆகும். பிறரது பாரத்தை சுமக்கவும், தாங்கவும், தேற்றவும், கற்று கொள்வோமானால் நமது பாரம் இலகுவானதாக தோன்றும்.

நமது பாரங்களை மட்டுமே சிந்தித்து நம்மை நாமே நொந்து கொள்ளும் நிலையை மாற்றி பிறரது பாரத்தை சுமந்து கிறிஸ்துவின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்

அவர்களது வியாதியில் அவர்களை சந்தித்து ஆறுதலை கூறுவோம். சிறையில் கண்ணீரோடு இருப்பவர்களை சந்தித்து, ஆறுதலை கூறி அவர்களின் பாரங்களை நாம் சுமக்கும்போது, நம் பாரங்கள் தானாக மறைவதை காண்போம்.

. ஆனால் வேதம் தரும் ஆலோசனை ‘அழுகிறவர்களோடு அழுங்கள்’ என்பதே.
விருந்து வீட்டிற்கு போவதிலும் துக்க வீட்டிற்கு போவது நலம். நகைப்பை பார்க்கிலும் துக்கிப்பு நல்லது. முக துக்கத்தினாலே இருதயம் சீர்படும் என்றே கூறுகிறது.

அதாவது ஒருவரது துக்கத்தில் அவருக்கு ஆறுதலாயிருக்க வேண்டும். இழப்பிலே, நஷ்டத்திலே, அனாதை இல்லத்திலே, சிறையிலே, கண்ணீரோடு; பாரத்தோடு இருப்பவர்களின் பாரத்தில் பங்கெடுங்கள்.

பதவியிலிருப்போரையும், செல்வந்தரையும் சந்திக்க, விசாரிக்க ஆட்கள் அதிகம். சமீபத்தில் வியாதியாயிருந்த சினிமா நடிகருக்காக மண் சாப்பாடுகளை சாப்பிட்டும், மொட்டை அடித்தும் தங்கள் கடவுள்களிடம் வேண்டி கொண்டவர்கள் எத்தனை பேர்?

அதே ஆஸ்பத்திரியில் தங்கள் ஒரே மகனையோ, மகளையோ மரணத்திற்கு ஒப்பு கொடுக்க வேண்டியது வந்துவிடுமோ என்ற பயத்தில் உயிருக்காக போராடி தவித்துக் கொண்டு இருக்கும் நிலையில் இருக்கும் யாரையாவது இவர்கள் போய் விசாரித்தார்களா?

கடவுளிடம் வேண்டி கொண்டார்களா? அவர்களை குறித்து யாராவது சிந்திக்கவாவது செய்தார்களா? இல்லை! மற்ற வேதங்களில் காணாத அன்பின் பிரமாணங்கள் நம் வேதத்தில் மாத்திரம் உண்டு.

ஏழை எளியோரை சென்று விசாரித்து அவர்களது கண்ணீரை துடைக்க ஆறுதல் கூற, உதவிகள் செய்ய மனமுவந்து முன்வருவோர் மிக சிலரே.

அந்த மிக சிலரில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டுமென்பதே தேவனுடைய விருப்பமாகும்.

நாமும் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து தேவனுடைய நீதியை நிறைவேற்ற நம்மை முழுவதுமாய் ஒப்புக் கொடுப்போம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிந்தையே நம் யாவரிலும் நிலைத்து நிற்க நம்மை அர்பணிப்போம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் நம் யாவரோடும் தங்கி தரித்திருப்பதாக.

ஆமென்.

  • Related Posts

    Death and life are in the power of the tongue

    மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். நீதிமொழிகள்:18:21 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நாம் பேசும் நல்ல வார்த்தையே நம்மை வாழ்வில் மேலோங்க வைக்கும்…

    Daily Manna 243

    கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார். சங்கீதம் :94 :22. எனக்கு அன்பானவர்களே! தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் பதிலளிக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். குடிப் பழக்கத்திற்கு அடிமையாயிருந்த…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Winning Spiritual Battles with Faith and Confidence

    Winning Spiritual Battles with Faith and Confidence

    God’s Presence Gives Rest

    God’s Presence Gives Rest

    Gods Blessings

    Gods Blessings

    Tamil Bible Verse – Videos

    Tamil Bible Verse – Videos

    The Golden Gate’s Timeless Majesty

    The Golden Gate’s Timeless Majesty

    Rise of Competitive Video Gaming

    Rise of Competitive Video Gaming