Daily Manna 135 – அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.

என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். நீதிமொழி:8 :17

எனக்கு அன்பானவர்களே!

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதியாக இருந்தவர் .

அந்நாட்களில் ஒரு நாள் அதிகாலையில் மூத்த அரசு அலுவலர்கள் அவரை பார்த்து ஒரு முக்கியமான காரியத்தில் அவருடைய ஆலோசனையை பெறும் படி சென்றிருந்தார்கள்.

அவரது அறையின் அருகில் சென்ற போது அவர் யாருடனோ பேசி கொண்டிருந்தது போல் பேச்சு குரல் கேட்டது.ஆகவே இவரை தொந்தரவு செய்ய மனமில்லாமல் அவர் வரும் வரை பக்கத்து அறையில் காத்திருந்தனர்.

வெகு நேரம் கழித்து ஆபிரகாம் லிங்கன் வெளியே வந்தார். ‘ஐயா நாங்கள் காலை 5 மணிக்கே வந்து விட்டோம். நீங்கள் யாருடனோ பேசி கொண்டிருந்தீர்கள். ஆகவே நாங்கள் காத்திருந்தோம்’ என்றனர்.

‘வேறு யாருமல்ல, நான் ஆண்டவரோடு பேசிக் கொண்டிருந்தேன்’ என்று ஆபிரகாம் லிங்கன் சொன்னவுடன் அவர்களுக்கெல்லாம் பெரிய ஆச்சரியம்! அவர்களது வியப்பை கண்ட ஆபிரகாம் சிறிது விளக்கம் அளித்தார்.

‘நான் சிறு பையனாக இருக்கும் போது காடுகளில் விறகு வெட்டி ஜீவனம் செய்து வந்தோம். என் பாட்டி தான் என்னை பராமரித்து வந்தார்கள். அவர்கள் எனக்கொரு வேதாகமத்தை கொடுத்து ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் எழுந்தவுடன் அதை தியானிக்க வேண்டும் என்றும் வேலை தொடங்குவதற்கு முன்னும் வேதத்தை படிக்கவும், ஜெபிக்கவும் கற்றுக் கொடுத்தார்கள்.

ஆண்டவருடன் மாத்திரமே முதலில் பேச வேண்டும் என்றும் கூறினார்கள். அந்த பாடத்தை நான் இன்னும் விட்டு விடாமல், முதலில் ஆண்டவருடன் நான் பேசி விட்டு தான் வெளியே வருவேன் என்றார்.

பிரியமானவர்களே,
இன்று நாம் எப்படி இருக்கிறோம்? நம் பிள்ளைகளை எப்படி பழக்குவிக்கிறோம்??

இன்று நம்மில் அனேகர் தங்கள் வாழ்க்கையில் படிப்பதற்க்கு, வேலைக்கு போவதற்க்கு அல்லது வேறு காரியங்களுக்கு போவதற்காக அதிகாலையில் எழும்புகிற அநேகர்
ஜெபிப்பதற்க்காக அதிகாலை நேரத்தை ஒதுக்குவதில்லை.

அநேகர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அதிகாலையில் எழும்புகிறார்கள். ஆனால் தங்களுக்கு பிள்ளைகளை கொடுத்து ஆசீர்வதித்த தேவனுக்கு அதிகாலை நேரத்தை கொடுப்பதில்லை.

இது எத்தனை வேதனையான காரியம். ஆனால் ஆண்டவர் சொல்லுகிறார். அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் கண்டடைவார்கள் என்று.

வேதத்தில் பார்ப்போம்,

அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப் பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
சங்கீதம் 143 :8.

தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்.
சங்கீதம் 46 :5.

அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப் பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
சங்கீதம் 143 :8.

பிரியமானவர்களே,

வேதம் சொல்லுகிறது:
என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன் அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். நீதிமொழிகள் 8-17. அதிகாலையில் தேவனை தேடுகிறவர்கள் அவரை காண்கிறார்கள்.
அவர் உலாவுவதை உணர்கிறார்கள். அவர் குரலை கேட்கிறார்கள்.

இன்றைக்கு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட புறமத ஜனங்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு தேவனை தொழுது கொள்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் தேவனை முழு உள்ளத்தோடு நேசிக்கிறார்கள்.

ஆனால் நாமோ தூங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு ஊழியம் செய்கிற அநேகர் கூட அதிகாலையில் தேவசமூகத்துக்கு போகாமல் தூங்கிக் கொண்டு, தூக்கத்துக்கு அடிமையாகி விட்டார்கள். சோதனைகள் வரும் போது சோர்ந்து போய் வீழ்ந்து விடுகிறார்கள்.

ஒரு முறை ஒரு வாலிபன் தன் ஜெப அனுபவத்தை பகிர்ந்து கொண்டான். தினமும் அதிகாலையில் எழுந்து தன்னை ஆயத்தப்படுத்தி கொண்டு தேவ சமூகத்தில் காத்திருந்து இயேசு கிறிஸ்து தன்னோடு பேசும் வரை ஜெபிக்கிற பழக்கம் அந்த வாலிபனுக்கு இருந்தது.

கர்த்தர் அந்த வாலிபனோடு கூட இருந்து அவன் படிப்பிலே பெரிய வெற்றியை கொடுத்தார். படித்தவுடனே ஒரு அரசாங்க வேலையையும் கொடுத்தார். அந்த வேலையிலும் கர்த்தர் அவனை உயர்த்தி ஒரு பெரிய அதிகாரியாக்கி உயர்ந்த இடத்தில் வைத்தார்.

நீதிமொழி: 29:25 மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான் என்று பார்க்கிறோம்.

ஆனால் அதிகாலையில் சுகமான தூக்கத்தை தியாகம் செய்து தேவ சமூகத்தில் காத்திருந்து கிரயம் செலுத்துகிறவர்கள் தேவனை தரிசிக்கிறார்கள்.

அதிகாலையில் தேவ சமூகத்தில் இயற்கைக்கப்பாற்பட்ட தேவ வல்லமையையும் தேவ மகிமையையும் பெற்று கொண்டவர்கள் தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்படுகிறார்கள் .ஆம், அதிகாலை நேரத்தை அன்பருடன் செலவிடுவது ஒரு இன்பமான வேளை.

‘என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்;
அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு.

பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப் பார்க்கிலும் என் வருமானம் நல்லது.

என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப் பொருளைச் சுதந்தரிக்கும் படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும் படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாய பாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்’ நீதிமொழிக்ள 8:17-21. இந்த இடத்தில் இயேசு கிறிஸ்துவைப் பற்றி கூறப்பபட்டுள்ளது.

அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள் என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். அப்படி அவரை அதிகாலையில் தேடி கண்டடையும் போது, அவர்களை ஆசீர்வாதத்தின் ஊற்றுகளாக தேவன் மாற்றுகிறார்.

நாமும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தேவ சமூகத்தில் காத்திருக்க கிருபை தாரும் என மன்றாடுவோம். அவர் தரும் மேலான ஆசீர்வாதங்களை பெற்று இவ்வுலகில் வளமாய் வாழ, நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் அனைவருக்கும் கிருபை செய்வாராக.

ஆமென்.

  • Related Posts

    தயவு – கிறிஸ்துவின் இதயத்தின் பிரதிபலிப்பு | Mercy – The Reflection of Christ’s Heart

      ✝️ தயவு — கிறிஸ்துவின் நம்மிடத்திலான அழகிய கனி “எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்;உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது.”— யோபு 10:12 ✨ ஆரம்ப வாழ்த்து எனது அன்பான சகோதரர் சகோதரிகளே,கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்…

    Death and life are in the power of the tongue

    மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். நீதிமொழிகள்:18:21 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நாம் பேசும் நல்ல வார்த்தையே நம்மை வாழ்வில் மேலோங்க வைக்கும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    தயவு – கிறிஸ்துவின் இதயத்தின் பிரதிபலிப்பு | Mercy – The Reflection of Christ’s Heart

    தயவு – கிறிஸ்துவின் இதயத்தின் பிரதிபலிப்பு | Mercy – The Reflection of Christ’s Heart

    Winning Spiritual Battles with Faith and Confidence

    Winning Spiritual Battles with Faith and Confidence

    God’s Presence Gives Rest

    God’s Presence Gives Rest

    Gods Blessings

    Gods Blessings

    Tamil Bible Verse – Videos

    Tamil Bible Verse – Videos

    Finding Rest in the Goodness of the Lord

    Finding Rest in the Goodness of the Lord