Daily Manna 266

உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. நீதிமொழிகள்: 3:9

எனக்கு அன்பானவர்களே!

ஆசீர்வாததத்தின் ஊற்றும் உறைவிடமும் காரணருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு போதகர் திடீரென்று ஒரு வீட்டிற்கு மாலையில் வந்தார். சற்று நேரம் பேசி விட்டு அவரை வழியனுப்பி வைக்கும் போது தன்னிடம் இருந்த 20 டாலரை காணிக்கையாக அவரிடம் கொடுத்து அனுப்பினார் அவ்வீட்டின் உரிமையாளர்.

அச்சமயம் அவ்வளவு தான் அவருடைய பணப்பையில் (Wallet) இருந்தது. அதை கொடுத்து விட்டார். தன்னிடம் இருந்ததை கொடுத்து விட்டதால் அவரிடம் வேறு பணம் ஏதும் இல்லை.

அவர் சென்ற பின் சாப்பிட என்ன செய்வது…என்று யோசித்தார்.
அப்போது அவரிடத்தில் வாகனம் இல்லாத காலம் அது. வங்கிக்குப் போக வேண்டுமென்றால் சற்றே தூரம் தான் செல்ல வேண்டும்.

சரி அருகிலுள்ள கடைக்கு சற்றே நடந்து போய் வரலாம் என்று சொல்லி “Lucky’s” (தற்போது அதன் பெயர் Albertsons) என்ற ஒரு கடைக்கு உள்ளே சென்றார்.

அங்கே மிகவும் வயதான ஒரு மூதாட்டி அவரிடம் வந்து, “Here.., this is for you” என்று சொல்லி கையில் ஏதோ கொடுத்து விட்டு சென்றார்கள். கையை திறந்து பார்த்தால் 30 டாலர் இருந்தது.

ஏறெடுத்து அவர்களைத் தேடிய போது அந்த மூதாட்டி எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. மனதில் ஒருவித ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியும், அதே சமயம் தேவன் மிகவும் பிரியமுள்ளவராக இருக்கிறாரே என்பது நெஞ்சைத் தொட்டதால் உள்ளே அழுகை கலந்த உணர்வும் வந்தது.

ஆம், வேதம் கூறுகிறது, கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் என்று. இதை சொன்னவர் நமது அருமை ஆண்டவர் இயேசு கிறிஸ்து..

“கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்” லூக்கா: 6:38 என்று வேதம் கூறுகிறது.

அதிகமான ஆசீர்வாதங்களை பெறுவதற்கான திறவுகோல் உங்களிடம் இருப்பதை மற்றவருக்கு கொடுப்பதேயாகும்.
இது பணத்தை மாத்திரமல்ல, மற்றவரை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளையும் குறிக்கிறது.

வேதத்தில் பார்ப்போம்,

தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
லேவியராகமம்: 27 :30.

ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்;
எபிரேயர்:7 :2.

கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டு வரக்கடவன்.
உபாகமம் :16 :17.

பிரியமானவர்களே,

கொடு என்பது கட்டளை. உதாரத்துவமாய் கொடுங்கள். உங்களால் கூடுமானவரையும் எல்லா நல்ல காரியத்துக்கும் கொடுங்கள். நல்ல நோக்கத்தோடு நம்பி கொடுங்கள்.

இது என் கடமை. மனுஷருக்கு இதனால் ஆசீர்வாதம் கிடைக்கும். என் தேவனுக்கு இதனால் மகிமை வரும் என்று எண்ணிக் கொடுங்கள்.

கொடுக்கப்படும் என்பது வாக்குத்தத்தம். இப்படிச் சொன்னது யார்? சொன்னதை செய்து நிறைவேற்றக் கூடியவர். எப்படியென்றால், அவர் ஐசுவரியமுள்ளவர். சகலத்தையும் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்.

ஏனெனில் அவர் உண்மையுள்ளவர். நிறைவேற்றக் கூடியவர். உதாரத்துவமாய் கொடுக்கும் எவருக்கும் இப்படி வாக்குக் கொடுக்கப்படுகிறது.

இது உன் ஆத்துமாவுக்கும், உன் சரீரத்துக்கம் இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்றதாயிருக்கிறது. கொடுங்கள் அப்போது அமுக்கி குலுக்கி சரித்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள்.

சில விதைகளை விதைக்கிறோம். ஆனால் எவ்வளவோ தானியங்களை அறுவடை செய்கிறோம். உன் உதாரகுணம் இயேசுவில் விசுவாசம் வைத்து, அவருடைய நாமத்தை நேசிக்கிறதிலிருந்துப் பிறக்கிறதா?

உங்கள் கரங்களை நீங்கள் திறக்கும் போது, உங்கள் வாழ்க்கையில் நீர் தேக்கத்தைப் போல் கட்டப்பட்டுள்ள ஆசீர்வாதங்களை நீங்கள் காண்பீர்கள்.

ஆம், “உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்கு நிச்சயம் தண்ணீர் பாய்ச்சப்படும்”

ஆம்,முகமலர்ந்து, உதாரகுணத்துடன் கர்த்தருக்கென்று கொடுப்போம். அதற்கான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டு வளமான வாழ்வு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.

 

Similar Posts

  • Daily Manna – Christmas

    Christmas தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. மத்தேயு 1:20 *********** எனக்கு அன்பானவர்களே! பெத்தலை பாலகனாம் பிறந்த இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். இயேசுவின் பிறப்பை குறித்து அநேகர் பல சந்தேகங்கள் கொள்வதுண்டு. அதில் ஒன்று தான் பரிசுத்த ஆவியினாலே குழந்தை உண்டாகுமா? இதற்கு விளக்கம் வேதத்திலே உண்டு. பெண் துணையின்றி ஒரு ஆண் உண்டாக…

  • The God of Jacob is our fortress

    The God of Jacob is our fortress இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். மத்தேயு 1:23 ========================= எனக்கு அன்பானவர்களே! இம்மானுவேலராய் நம்மோடு இருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். வேலூர் கிறிஸ்தவ மருத்துவமனையில் இந்து குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆறு வயது பெண் பிள்ளை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தாள். அவளுக்கு ஒவ்வொரு உறுப்புகளாக செத்துக் கொண்டே…

  • Daily Manna 231

    எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.” நீதிமொழிகள்: 11:25. எனக்கு அன்பானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். 17- ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஜெர்மன் போதகர் ஆகஸ்ட் H. ஃபிராங்க், என்பவர் ஹாலேயிலுள்ள அனாதை குழந்தைகளை பராமரிப்பதற்காக, ஒரு அனாதை இல்லத்தை நிறுவினார். ஒருநாள் ஃபிராங்க் தனது வேலையைச் செய்வதற்கு நிதி தேவையோடு இருந்தார். அதேசமயம் ஒரு ஏழை கிறிஸ்தவ விதவை அவருடைய வீட்டு வாசலில் நின்று…

  • Daily Manna 27

    கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள். என்று எனக்கு அவர்கள் சொன்ன போது மகிழ்ச்சியாயிருந்தேன். சங்: 122:1 அன்பானவர்களே! ஒருவர், “என்னம்மா இன்றைக்கு மகள் ஆலயம் வந்திருக்கிறாள்?” என்று கேட்டார். “ஆமாம் நாளை பரீட்சை, அதுதான் வந்தாள்” என்ற பதில் அம்மாவிடமிருந்து வந்தது. “என்ன குடும்பமாய் இன்று ஆலயம் வந்திருக்கிறீர்கள்?” என்றால், “மகனுக்கு “பெண் பார்க்க போகவேண்டும். அதுதான் ஆலயம் வந்து ஜெபம் செய்து விட்டு போகலாம் என்று வந்தோம்” என்ற பதில். இப்படியாக ஆலயம் செல்லுவதற்கு எத்தனை…

  • Daily Manna 216

    உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன். சங்கீதம்: 119:92 உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்.சங்கீதம்: 119:92 எனக்கு அன்பானவர்களே! மனமகிழ்வை தருகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ராபர்ட் யங் என்ற மிகப்பெரிய கோடீஸ்வரர் தான் பெரிய அதிகாரியாக வர வேண்டும் என ரொம்ப நாள் ஆசை. அவரது விடாமுயற்சியால் பெரும் போராட்டத்திற்குப் பின் நியூயார்க் மாநகரின் ரயில்வே…

  • Daily Manna 92

    தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்தும்படிக்கு இவைகளை நான் அதிக தைரிமாய் எழுதினேன். ரோமர் 15 :16 எனக்கு அன்பானவர்களே! கிருபையுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். மாவீரன் அலெக்சாண்டர் பல நாடுகள் மீது போர் தொடுத்து அவற்றை எல்லாம் தன் வசப்படுத்தினார். அவரை ஒரு அறிஞர் சந்தித்தார்.நீங்கள் வெற்றி கொண்ட பலர் பலசாலியாக இருந்த போதும், நீங்கள் எப்படி அவர்களை தோற்கடித்து விட்டீர்கள். அதற்கு உங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *