Daily Manna 157

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள். நீதிமொழிகள்:12:22 பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.நீதிமொழிகள்:12:22 எனக்கு அன்பானவர்களே! நீதியின் நியாதிபதியாக இருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். உலகமெங்கும் வியாபித்திருக்கின்ற ஒரு தீமையான காரியம் பொய் கூறுவது அல்லது உண்மையல்லாத வாழ்க்கை வாழ்வது. பெரும்பாலான மக்களின் வாழ்வில் இதைக் காண முடியும். பொய்யான வாழ்வினால் உடைந்து போன குடும்பங்கள் ஏராளம். உறவுகளில் விரிசல் ஏற்படுவதற்கு பொய் ஒரு முக்கியமான காரணமாக அமைகிறது….

Daily Manna 156

அநீதியான உலகப் பொருளைப் பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால்,யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? லூக்கா:16 :11. அநீதியான உலகப் பொருளைப் பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால்,யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?லூக்கா:16 :11.*************அன்பானவர்களே! நீதியின் நியாதிபதியாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு நாட்டின் ராஜா தனது அரண்மனையின் கருவூலத்தில் பணி செய்வதற்காக உண்மையுள்ள மனிதர்கள் சிலரை தெரிவு செய்ய விரும்பினார். ஆகவே தனது சிப்பந்திகள்…

Daily Manna 155

கர்த்தர் தம்முடைய முகத்தை உன் மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் எண்ணாகமம்:6:26 எனக்கு அன்பானவர்களே! சமாதானத்தின் தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு மனோதத்துவ மருத்துவரிடத்திலே ஒரு மனிதன் வந்தான். “என் உள்ளத்திலே சந்தோஷமோ, சமாதானமோ இல்லை; கவலையும், வெறுப்பும் எப்பொழுதும் என் உள்ளத்திலிருக்கிறது; நான் சந்தோஷமாயிருக்க எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்” என்றான். மருத்துவர் அவனிடம் “நமது பட்டணத்தில் ஒரு சர்க்கஸ் நடைபெறுகிறது; அதில் ஒரு…

Daily Manna 154

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்து விடுங்கள். 1 பேதுரு 5 :7. எனக்கு அன்பானவர்களே! கைவிடாத நேசராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இங்கிலாந்து தேசத்தில் “பிளாரன்ஸ் நைட்டிங்கேல்” என்ற அம்மையார் இருந்தார்கள். பல வருடங்களுக்கு முன்பு ரஷ்யாவில் ஒரு கடுமையான யுத்தம் நடந்தது. அதின் முடிவில் ஏறக்குறைய ஐயாயிரம் ரஷ்ய வீரர்கள் படுகாயமடைந்து, யாருடைய உதவியுமின்றி வேதனையில் தவித்தனர். அவர்களுக்கு உதவிச் செய்வதற்காக நைட்டிங்கேல்…

Daily Manna 153

கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக் கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுது கொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள். அப்போஸ்தலர்: 7:59. எனக்கு அன்பானவர்களே! நமது அருமை இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இரண்டாம் நூற்றாண்டின் மத்தியில் “சிமிர்னா” சபையின் பிஷப்புமாக இருந்த “பொலிகாப்” அவர்கள் கிறிஸ்துவில் கொண்டிருந்த விசுவாசத்தை மறுதலிக்க மறுத்ததால் எரியூட்டப்பட வேண்டுமென்ற தீர்ப்பு ரோம சாம்ராஜ்யத்தினால் வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 86. இந்த வயதின் காரணமாக கிறிஸ்துவை…

Daily Manna 152

Do Not Be Jealous Of Wicked Men; You Don’t Want To Be With Them. பொல்லாத மனுஷர் மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே. நீதிமொழிகள்: 24 :1 எனக்கு அன்பானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பொதுவாக யார் பொய் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அவரிடம் மற்ற எல்லா கெட்ட குணங்களும் நிறைந்து இருக்கும். அது போலவே பொறாமை குணம் உள்ள…