Daily Manna 159

உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன். சங்கீதம்:119:12

உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்.
சங்கீதம்:119:12
*************
எனக்கு அன்பானவர்களே!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு தகப்பன் மருத்துவமனையிலிருந்து தன் குழந்தையை அழைத்துக் கொண்டு புறப்பட்ட போது, திடீரென வீதி விளக்குகள் அனைத்தும் அணைந்து விட்டன.

அன்று அமாவாசை இருட்டு. சற்று தூரம் சென்ற பின், அவர்கள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் விளக்கும் திடீரென அணைந்து விட்டது. பிரயாணமோ நீண்ட தூரம்.

ஆண்டவரைத் துதித்துப் பாடிய வண்ணம் மெதுவாக சென்று கொண்டிருந்தார்கள். அப்போது, திடீரென எங்கிருந்தோ ஒரு சைக்கிள் வேகமாக எங்கள் பக்கம் வருவது தெரிந்தது. அந்த சைக்கிள் வெளிச்சத்தில் அவர்கள் முன் சென்றனர்.

அவர்கள் போக வேண்டிய இடம்மட்டும் அவர்களோடு அந்த சைக்கிளில் வந்த நபரிடம் நன்றி சொல்வதற்கு திரும்பிய போது, அவர் முன் சென்று மறைந்து போனார்.

அன்று மட்டும் அவர் வந்திராவிடில் அந்த இருட்டில் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டிருப்போம்” என்று தங்கள் அனுபவ சாட்சியை ஒரு குடும்பத்தினர் பகிர்ந்து கொண்டனர்.

ஒரு மோட்டோர் சைக்கிளை வழிநடத்தியது ஒரு சாதாரண சைக்கிள் வெளிச்சம்.
சங்கீதகாரன் தாவீது கூறுகின்றார், “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” என்கிறார்.

அதாவது, தனது வாழ்க்கை பாதையில் தன்னை வழிநடத்துவதற்கு வெளிச்சமாக தேவனுடைய வார்த்தை இருக்கிறது என்கிறார்.

இந்த இரகசியம் தேவனுடைய வார்த்தைகளைத் தினமும் தியானிப் போருக்கு மட்டுமே இது புரியும். ‘இது சங்கீதக்காரனின் அனுபவம்;

வேதத்தில் பார்ப்போம்

தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது, அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.
சங்கீதம்: 37:31

நான் பிழைத்திருக்கும் படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக, உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.
சங்கீதம்: 119:77.

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
சங்கீதம்:119:105.

பிரியமானவர்களே,

தேவ மனிதரான கேம்பல் மார்கன் என்பவர் வேதத்தின் 66 புத்தகங்களுக்கும் சிறந்த விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்.

அவர் குறிப்பிடும் பொழுது நான் ஒவ்வொரு புத்தகத்திற்கும் விளக்கவுரை எழுத ஆரம்பிக்கும் முன்னதாக, அந்த புத்தகத்தை குறைந்தது 50 முறையாவது படிக்காமல் நான் எழுதுகோலைத் தொடமாட்டேன் என்று கூறுகிறார்.

வேதத்தை நாம் தியானிக்க வேண்டும்.சங்கீதம் 1:2ல் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும், பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் என்று வாசிக்கிறோம்.

கர்த்தருடைய வார்த்தையை தியானிப்பது என்றால், அதை ஆழ்ந்து சிந்திப்பது, அசை போடுவது என்று பொருள்படும்.
இப்படி நாம் செய்யும் பொழுது, வேதத்திலிருந்து நாம் சிறந்த காரியங்களை கற்றுக் கொள்ள முடியும்.

நம் வாழ்வுக்கு தேவையான அனைத்தும் வேதப் புத்தகத்திற்குள் இருக்கிறது ,நாம் கிறிஸ்துவின் சாட்சிகளாயிருக்க வேண்டுமானால் நாம் வேதத்தையும் மற்றவர்களுக்கு கொடுத்தே ஆக வேண்டும்.

இந்த வழிமுறைகளோடு நீங்கள் வேதத்தை படிப்பீர்களென்றால், வேதப்புத்தகம் உங்கள் வாழ்கையில் பெரிய மாற்றத்தையும், சிறந்த செயல்களை உங்களால் செயல்படுத்த முடியும்.

எனவே வேதத்தை தினம் தினம் வாசிப்போம், மன நிறைவோடு தேவன் தருகிற சமாதானத்தை பெற்றுக் கொள்வோம்.

Similar Posts

  • Daily Manna 275

    மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை. நீதிமொழிகள்:27:21 எனக்கு அன்பானவர்களே! இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். இந்நாட்களில் சோதனைகள் பல ரூபங்களில் நம்மைத் தாக்க நேரலாம்; வியாதியாகவோ, பண கஷ்டமாகவோ, சபலமாகவோ, துன்புறுத்தலின் வடிவிலோ நம்மைத் தாக்கலாம். ஆனால் ஒன்றை மறவாதீர்கள் உங்களுக்கு வரும் சோதனைக் களங்கள் எல்லாம், உங்களுக்கு சாதனைத் தளங்களே! நீங்கள் சோதனைகளை தவிர்க்க நினைத்தால் பல சாதனைகளும் தவிர்க்கப்படும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் இந்த உலகத்தால்…

  • Daily Manna 286

    தடைகளை நீக்கிப் போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்து போகிறார் மீகா: 2:13 எனக்கு அன்பானவர்களே! தடைகளை நீக்கி, நம்மை செவ்வையாய் நடக்க செய்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பண்டைய காலத்தில், ஒரு மன்னர் ஒரு சாலையில் பெரிய கற்பாறை ஒன்றை வைத்தார். பின்னர் அவர் தன்னை மறைத்துக் கொண்டு, யாராவது அந்த கற்பாறையை வழியிலிருந்து நகர்த்துவாரா என்று பார்த்துக் கொண்டிருந்தார். ராஜாவின் செல்வந்த வணிகர்கள் மற்றும் பிரபுக்கள்…

  • Daily Manna 210

    நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். மத்தேயு: 21:22 நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். மத்தேயு: 21:22^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^எனக்கு அன்பானவர்களே, நம் ஜெபத்திற்கு பதில் தருபவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு ஆலயத்திற்கு எதிராக மதுபானம் ஒன்றை விற்பனை செய்ய ஒரு கடை திறக்க, ஒரு பிரமுகர் ஏற்பாடு செய்து பணியைத் துவக்கினார். சபை அங்கத்தினர்கள் எதிர்த்தனர். ஆனால், அவர்…

  • Love and Bless Others

    Be not quick in your spirit to become angry, for anger lodges in the heart of fools. உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங் கொள்ளாதே, மூடரின் நெஞ்சிலே கோபம் குடி கொள்ளும். பிரசங்கி 7:9 *********** அன்பானவர்களே, இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும் என்பது பாரதியாரின் கவிதை பாணிகளில் ஒன்று. சினம் முன் வாசல்…

  • Daily Manna 61

    சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது. 1 கொரி1:18 எனக்கு அன்பானவர்களே! சிலுவை நாதர் இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ரொன் பேக்கர் (Ron Baker) என்னும் மனிதரின் வாழ்க்கையில் எல்லாமே தலை கீழாக போய் கொண்டிருந்தது. தனது சிறுவயதில் சென்ற தகாத அனுபவங்களால், அவர் ஒழுக்கமாக பேசக் கூடாதவராகவும், படிப்பறிவில்லாதவராகவும் இருந்தார். மேலும் அவர் குடிப்பழக்கத்திற்கும் சூதாட்டத்திற்கும், செய்வினை,…

  • Daily Manna 189

    மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான். கர்த்தரால் தயையும் பெற்றுக் கொள்ளுகிறான். நீதிமொழிகள்: 18:22. மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான். கர்த்தரால் தயையும் பெற்றுக் கொள்ளுகிறான்.நீதிமொழிகள்: 18:22. எனக்கு அன்பானவர்களே, நல்வாழ்வை அமைத்து தருபவராகிய இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இரண்டு மன்னர்கள் சண்டையிட்டு கொண்டார்கள். அதில் தோற்றவனிடம் வென்றவன் சொன்னான். ”நான் கேட்கும் கேள்விக்கு நீ சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே தந்து விடுவேன்” என்றான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *