Daily Manna 225

சௌந்தரியம் வஞ்சனையுள்ளது அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகப்படுவாள்

எனக்கு அன்பானவர்களே!

கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு ராஜா அழகான குதிரை ஒன்று வளர்த்து வந்தார்.அந்த குதிரைக்கு தான் இன்னும் அழகாக வேண்டும் என்று ஆசை வந்து கடவுள் கிட்ட வேண்டியது.

கடவுள் குதிரையின் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.குதிரை நான் இன்னும் அழகாகனும் அதுனால என் கழுத்தை நீளமாகவும் கால்களை நீளமாகவும் படைக்க வேண்டும் என்று கேட்டது.

கடவுளும் குதிரை கேட்ட மாதிரி கழுத்தையும்,
கால்களையும் நீளமாக படைத்தார்.குதிரை இப்போது ஒட்டகம் மாதிரி ஆகிவிட்டது.

தன் உருவத்தை பார்த்த குதிரைக்கு அழுகை வந்து விட்டது. அய்யோ கடவுளே என்னை பழைய மாதிரியே மாற்றி விடுங்கள் என்று கேட்டது குதிரை.

நீ விரும்பிய மாதிரி தான் உன்னை படைத்துள்ளேன்,
பிறகு ஏன் வருத்தபடுகிறாய் என்று கேட்டார்.

நான் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக படைத்துள்ளேன்.
உன்னால் தரையில் வேகமாக ஓட முடியும்,ஒட்டகத்தால் பாலைவனத்தில் விரைவாக ஓடமுடியும் அதிகமாக பொதி சுமக்க முடியும் .

நீங்கள் அழகு வேண்டும் என்று மேலும் மேலும் ஏதாவது செய்ய நினைத்தால் இப்படித் தான் போய் முடியும் என்றார். இப்பிரபஞ்சத்திற்குரிய வேஷம்’. மாற வேண்டுமெனில் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் தேவை

”அழகு என்பது உருவத்தில் அல்ல நீ செய்யும் செயலிலே”
உள்ளது.

வேதத்தில் பார்ப்போம்,

நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.
1 கொரிந்தியர்: 12:24.

அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றது.
1 பேதுரு :3:4

செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.
நீதிமொழிகள்: 31 :30.

பிரியமானவர்களே,
இந்த உலகம் புறத் தோற்றத்திற்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது,

நம்மில் அநேகர்
நான் அழகாக இல்லை. நான் குண்டாயிருக்கிறேன், ஒல்லியாயிருக்கிறேன், குட்டையாயிருக்கிறேன், நெட்டையாயிருக்கிறேன் என கூறி தங்களை தாங்களே தாழ்வாக எண்ணிக் கொள்ளுகிறார்கள்.

நீங்கள் மற்றவர்களுக்காகவா அல்லது உங்களுக்காகவா… யாருக்காக வாழ வேண்டும் என்று இருக்கிறீர்கள்

உலகம் உங்களை என்ன கூறினாலும் கவலைப்படாதீர்கள் நீங்கள் தேவனுடைய பார்வையில் விஷேசித்தவர்கள்.

அழகு என்பது தோற்றத்திலோ, அல்லது அலங்காரிப்போ அல்ல,
வேதம் கூறுகிறது.
“மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக் கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்
அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. (1 பேதுரு 3:3,4 என்று கூறுகின்றார்.

“ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப் பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக் கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்ற படியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்க வேண்டும்”
(1 தீமோ 2:9-10 அதுவே உயர்வான அழகு.

நாம் மற்றவர்கள் போல இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களிடம் இல்லாத ஒன்று உங்களிடம் இருக்கிறது என்ற உண்மையை மறந்துவிட வேண்டாம். ஏனென்றால் நமது அருமை இரட்சகர் யாரையும் வெறுமையாக உருவாக்கவில்லை.

உங்களை நீங்களே வெறுத்தால், உங்களை ஆசை அசையாய் படைத்த தேவனை துக்கப்படுத்துகிறீர்கள் என்று பொருள்.. தேவன் அனைவரையும் அழகாய் தான் படைத்திருக்கிறார்.

நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டேன் என்று தாவீது கூறுகின்றார்.
சங்கீதம் 139:15

ஆம், நம்மையும் அவர் விசித்திர விநோதமாய், நேர்த்தியாய், அழகாய் படைத்திருக்கிறார் என்பதை அறிந்து கர்த்தரின் கரத்தில் ஒவ்வொரு நாளும் வளர்வோம்.

கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதித்து தமது பிரசன்னத்தினால் நிறைத்து பாதுகாத்து வழிநடத்துவாராக.

ஆமென்

Similar Posts

  • None of you should do wrong to another

    None of you should do wrong to another உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயஞ்செய்யக் கூடாது; லேவி 25 :17. ×××××××××××××××××××××××××× எனக்கு அன்பானவர்களே! மனநிறைவோடு நம்மை வாழ வைக்கும் இறைவனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பல ஆண்டுகளுக்கு முன்னால் செய்தித்தாளிலே ஒரு கார்டூன் வரையப்பட்டிருந்தது. இரு வயல்கள் -ஒரு முள் வேலியினால் பிரிக்கப்பட்டிருந்தன. இரு வயல்களும் சம அளவுடையதாக இருந்தது. இரண்டிலும் பச்சை பசேர் என்று…

  • Daily Manna 84

    யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். மத்தேயு 12 :41 எனக்கு அன்பானவர்களே! இரக்கமுள்ளவராய் இருக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நினிவே என்கிற மிகப்பெரிய நகரமாகவும், அதிகமான பாவங்களும், அக்கிரமங்களும் காணப்பட்ட இடமாக இருந்தது. இது அசீரியாவின் தலைநகரமாகமாகும். அசீரியா என்றாலே முழு உலகமும் நடுங்குமளவுக்கு அது பயங்கரமானதாக இருந்தது. பகைவர்களை கொடூரமாக சித்திரவதை செய்து, கொல்வதில் இவர்கள் பெயர்…

  • Daily Manna 33

    நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர்… கேட்கிறார். மல்:1:6 அன்பானவர்களே! இன்று, ஆலயம், தேவசமுகம் என்பன நாகரீகத்தை அறிமுகப்படுத்தும் ஒரு இடமாக மாறி வருவது வேதனைக்குரிய விஷயம். நாம் தேவசமுகத்திற்கு எதற்காகச் செல்லுகிறோம்? யாரை ஆராதிக்கச் செல்லுகிறோம்? என்றதான எந்த விதமான உறுத்துதலும் இல்லாமல், நமது ஆடைகளையும், அணிகலன்களையும் காண்பிக்க செல்வது என்பது துக்கத்துக்குரியதும், வெட்கத்துக்குரியதும் மட்டுமல்லாமல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வேதனைப்படுத்தும் காரியமாயும்…

  • Daily Manna 201

    குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே 1 பேதுரு 1:19 குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே 1 பேதுரு 1:19.=========================எனக்கு அன்பானவர்களே! நம்மை மீட்டெடுத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இங்கிலாந்து தேசத்திலிருந்து அனேக பிரிட்டீஷ்காரர்கள் செல்வந்தர்களாகும் படி அமெரிக்காவிற்கு சென்றார்கள். இதில் ஒரு ஏழை மனுஷனும் இருந்தான். அவன் அமெரிக்காவிற்கு சென்று பெரிய பணக்காரனாக…

  • Daily Manna 220

    மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள் என்றார். லூக்கா :10:42. எனக்கு அன்பானவர்களே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருமுறை வில்லியம் பிரன்ஹாம் என்பவரின் வாழ்க்கை சரிதையைப் படித்தேன். அதில், தேவன் அவரை இரட்சித்து, தம்முடைய ஊழியத்தில் இணைத்த பொழுது,முழு நேரமும் போதனையும், பிரசங்கமுமாகவே இருந்ததால், தேவனின் பாதத்தில் அமர்ந்திருக்க நேரமில்லாமல், காலப்போக்கில் ஆவிக்குரிய வல்லமையை அவர் இழந்து போனார் என்று எழுதியிருந்தார். இந்த தோல்விகளினால்…

  • Daily Manna 236

    நீங்கள் என் சகோதரர், நீங்கள் என் எலும்பும் என் மாம்சமுமானவர்கள். 2 சாமுவேல்: 19:1 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள் இருந்தார்கள்.அந்த , நால்வரும் எப்போதும் சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள். அதனைக் கண்டு அப்பா மிகவும் வருத்தம் அடைந்தார். ஒற்றுமையாக இருங்கள் என்று கூறியும் அவர்கள் முடியாது என கூறி விட்டார்கள். ஒரு நாள் அவருக்கு உடல் நலம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *