Daily Manna 91

கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நியாயாதி 6:14

எனக்கு அன்பானவர்களே!

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

‌ நம்மிடமில்லாத சில காரியங்களை, பொருட்களை பிறரிடம் நாம் காணும் போது ஐயோ, நான் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று நம்மை நாமே எண்ணி விடுகிறோம்.

நம்மில் அநேகருக்கு தன்னைக் குறித்தே தாழ்வு மனப்பான்மை.
நான் கருமை நிறமாக இருக்கிறேன், இப்படி ஒவ்வொன்றைக் குறித்தும் கவலை. அழகு , உயரம், ஊனம் , படிப்பு ,நல்ல வேலையின்மை, போன்ற இவைகள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கலாம்.

ஆனால் அமெரிக்க தேசத்தின் அதிபரான ஆபிரகாம் லிங்கன் அவரது முகத் தோற்றத்தினால் பலமுறை கேலிக்கு உள்ளானார்.

ஒரு முறை ஒரு பெண், லிங்கனிடம், ‘நான் பார்த்தவர்களுள் நீ தான் மிகவும் அவலட்சணமானவன்’ என்றாள்.

ஆனால் இந்த கேலிகளால் அவர் சோர்ந்து வீட்டிற்குள் முடங்கவில்லை. அடிமைத்தனத்தை ஒழிக்க துணிந்து செயலாற்றினார்.

அவருடைய பக்தி வாழ்க்கை, ஜெபம், மன உறுதி, தியாகம் மற்றும் ஏழைகள் மீது கொண்டிருந்த இரக்கம் அவரை அமெரிக்காவின் தலைசிறந்த அதிபராக்கியது.

தாழ்வு மனப்பான்மை பிறர் முன்பு நம்மை செயலற்றவர்களாக மாற்றி விடுகிறது.

நாம் பெருமையுள்ளவர்களாக இருந்தால் பிறரை மதிக்க மாட்டோம். தாழ்மையுள்ளவர்களாக இருந்தால் எவரையும் உயர்வாய் மதிப்பிடுவோம்.

ஆனால் தம்மையே தாழ்வாக மதிப்பதே தாழ்வு மனப்பான்மை ஆகும். பொதுவாக இது வாலிபர்களையே அதிகம் தாக்கும்.

வேதத்தில் பார்ப்போம்,

நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.
யோசுவா 1 :9.

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.
சங்கீதம் 31 :24.
திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ் சொல்லுகிறேன்.
அப் 27 :22.

பிரியமானவர்களே,

வேதத்திலிருந்து கூற வேண்டுமென்றால் மிகவும் உயரம் குறைந்த குள்ளனாகிய பவுல் உலகத்தையே கலக்கினார்.

திக்குவாயான மோசே இலட்சக்கணக்கான இஸ்ரவேல் மக்களை நடத்தி சென்றார்.

சாலமோன் ராஜாவுக்கு அநேக அழகு மிகுந்த மனைவிமார் இருந்தாலும், கறுப்பு நிறமாயிருந்த சூலமித்தியாள் மீதே அதிக பிரியம் வைத்திருந்தார்.

அழகு என்பது நிறத்திலும் உடல் அமைப்பிலும் இல்லை. உள்ளத்தில் காணப்படும் நற்குணத்தில் தான் உள்ளது.

நமது பிறப்பு மற்றும் குடும்ப பின்னணியை குறித்து தாழ்வு மனப்பான்மை கொள்ளுகிறவர்கள் அநேகர் உண்டு.

நல்ல ஒழுக்கமில்லாத மில்லாதவளின் மகனாக பிறந்தாலும், உற்றாரால் புறக்கணிக்கப்பட்டாலும் யெப்தாவை தாழ்வு மனப்பான்மை தாக்கவில்லை – .
நியா 11:12,19)
தன்னாலும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அவருக்கு இருந்தது.

நம் குடும்ப பின்னணியை குறித்து நம்மையே குறைவாக மதிப்பிடாமல், நாம் தேவனின் இராஜரீக கூட்டத்தார் என எண்ணி பெருமிதம் கொள்ளுவோம்

இப்படி தாழ்வு மனப்பான்மையில் வாழும் சகோதர, சகோதரிகளே, பிறரோடு உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.

தாழ்வு மனப்பான்மையால், உங்கள் தன்னம்பிக்கையை இழந்து விடாதபடி கவனமாக இருக்க வேண்டும். என்னை போன்ற அமைப்புடனும், குணத்துடனும் யாருமே உருவாக்கப்படவில்லை, என்னை தனித்தன்மையுடன் தேவன் படைத்துள்ளார் என்ற உண்மையே உள்ளத்தில் இருக்கட்டும்.

நிறத்தையும், அழகையும் எண்ணி சோர்ந்து போகாதிருங்கள். நீங்கள் தேவனுடைய சாயலில் உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை மறந்து போகாதீர்கள்.

உங்களை பற்றிய தேவ திட்டத்தை உணர்ந்து அதை சிறப்பாக செய்ய முயற்சியெடுங்கள். உலகில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை கொண்டு தான் தேவன் பெரிய காரியங்களை செய்தார்.

உங்களை கொண்டும் பெரிய காரியங்ளை தேவன் செய்வார். எழும்பி கர்த்தருக்காக பிரகாசிப்போம்.அவர் தருகிற ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வோம்.

இப்படிப்பட்ட உன்னதமான வாழ்வு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.

ஆமென்.

Similar Posts

  • Daily Manna 157

    பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள். நீதிமொழிகள்:12:22 பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.நீதிமொழிகள்:12:22 எனக்கு அன்பானவர்களே! நீதியின் நியாதிபதியாக இருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். உலகமெங்கும் வியாபித்திருக்கின்ற ஒரு தீமையான காரியம் பொய் கூறுவது அல்லது உண்மையல்லாத வாழ்க்கை வாழ்வது. பெரும்பாலான மக்களின் வாழ்வில் இதைக் காண முடியும். பொய்யான வாழ்வினால் உடைந்து போன குடும்பங்கள் ஏராளம். உறவுகளில் விரிசல் ஏற்படுவதற்கு பொய் ஒரு முக்கியமான காரணமாக அமைகிறது….

  • Daily Manna 47

    நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். ஏசாயா 53:5 எனக்கு அன்பானவர்களே! நம்மை மீட்டெடுத்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஆசியா கண்டத்தின் தென்மேற்கு பகுதியில் ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டில் எல்லாக் குற்றங்களுக்கும் பெரும்பாலும் மரணம் மட்டுமே தண்டனையாக வழங்கப்பட்டது. மன்னிப்பு என்பதும், கருணை என்பதும் அங்கே சிறிதளவும் இல்லை. ஊர் மத்தியில் உள்ள ஒரு பொதுவான இடத்தில்…

  • Daily Manna 11

    இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும். லூக்கா 6:45. எனக்கு அன்பானவர்களே! நல் வார்த்தைகளால் நம்மை மகிழ்விக்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், “ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?” என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அந்த துறவி “அப்படி யாரும் சென்றதாக…

  • Daily Manna 9

    சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார். ஏசாயா 40 :29. எனக்கு அன்பானவர்களே! தேவ பலத்தால் நம்மை நிரப்பி வருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள ஒரு பள்ளியில், குளிர் காலங்களில் காலையிலே சென்று சகமாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்னால், நெருப்பு மூட்டி, வகுப்பறைகளை சூடாக்குகிற பொறுப்பு ஒரு மாணவனுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் சகமாணவர்கள் பள்ளி…

  • Lazy hands make for poverty, but diligent hands bring wealth

    Lazy hands make for poverty, but diligent hands bring wealth சோம்பற்கையால் வேலை செய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். நீதி 10 :4. ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ எனக்கு அன்பானவர்களே! புதிய உற்சாகத்தால் நம்மை நிரப்புகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு ஊரில் ஒரு அறிவாளி ஒருவர் இருந்தார். அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அடிக்கடி கோவிலுக்கு செல்வார். கடவுளை வேண்டுவார். அதற்கு…

  • Daily Manna 222

    நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப் பண்ணும்; விரும்பினது வரும் போதோ ஜீவவிருட்சம் போல் இருக்கும். நீதிமொழிகள்: 13:12 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு நாள் கி‌ராம சேவகர் ஒருவர்மரநடுகை தினத்தை முன்னிட்டு அக்கிராம மக்கள் அனைவரையும் அழைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு மரக்கன்று ஒன்றை கொடுத்தார். நீங்கள் அதை வீட்டில் நட்டு தினமும் அதை பராமரிக்குமாறும் கூறினார். ராஜா என்பவரின் குடும்பத்திற்கும் ஒரு மாங்கன்று கொடுக்கப்பட்டது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *