Daily Manna 25

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். சங்:128:1-4 அன்பானவர்களே! ஆலயங்களிலே திருமண ஆராதனையின் போது 128ஆவது சங்கீதங்களை வாசிக்கும் ஒரு பழக்கம் இருக்கிறது. அதை நாமும் கேட்டிருப்போம். 128ஆவது சங்கீதத்திலே அருமையான அநேக சத்தியங்கள் உள்ளன. இந்த சங்கீதத்திலே குடும்பத்தைக் குறித்ததான தேவ திட்டத்தைப் பார்க்கிறோம். உங்களுடைய குடும்ப வாழ்வு ஆசீர்வதிக்கப்பட்டதாய் இருக்க வேண்டும் என்பதே தேவனுடைய திட்டமாயிருக்கிறது. இதை வாசித்துக் கொண்டிருக்கும் கணவன்-மனைவி அல்லது புதியதாக திருமணமானவர்களே! இதோ, உங்களுக்கு கர்த்தருடைய…

Daily Manna 24

இதோ பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். சங்:127:4 அன்பானவர்களே! ஒரு தம்பதியினர் அநேக வருடங்களாக பிள்ளைகள் இல்லாததால் ஒரு பிள்ளையை எடுத்து வளர்ப்பதற்குத் தீர்மானம் பண்ணி, குழந்தை ஒன்றைத் தேட ஆரம்பித்தனர். மனதுக்குப் பிடித்த மாதிரி குழந்தை அமையாததால், பின்னர் பார்ப்போம் என்று சற்றுக் காலதாமதம் செய்தனர். அச்சமயத்தில் அந்த மனைவி தன் மனதை மாற்றிக் கொண்டு, குழந்தையை நான் தத்தெடுக்கவில்லை. தேவனுக்குச் சித்தமானால் நமக்கு ஒரு குழந்தையைத் தரட்டும்…

Daily Manna 23

சிறுமைப் பட்டவர்களுடைய நம்பிக்கை ஒரு போதும் கெட்டுப் போவதில்லை. சங்கீதம்:9:18 எனக்கு அன்பானவர்களே! நம்மை எப்போதும் வெற்றி சிறக்கப் பண்ணுகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள் இந்த உலகம் உபத்திரவங்களும் போராட்டங்களும் நிறைந்தவை. ஒவ்வொரு நாளும் பலவிதமான பிரச்சினைகளை நாம் சந்தித்து வருகிறோம். இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாக கோலியாத் எழும்பிய போது ஜனங்கள் அனைவரும் பயந்து கலங்கினர். ஆனால் சிறுவனான தாவீது பயப்படவேயில்லை. அவனுக்குள்ளே, ‘கர்த்தர் நிச்சயம் எனக்காக…

Daily Manna 22

தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்: நீதிமொழி:28 :27 எனக்கு அன்பானவர்களே! ஆசீர்வாதத்தின் ஊற்றும், உறைவிடமும், காரணருமாயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஜான் .டி. ராக்பெல்லர் சீனியர் (John D. Rockefeller Sr.) என்பவர் எப்படியாகிலும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவராய் அதற்காக கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். அவரது 33ஆவது வயதில் முதலாவது மில்லியன் டாலர்களை சம்பாதித்தார். பிறகு 43ஆவது வயதில் உலகத்திலேயே பெரிய கம்பெனிக்கு உரிமையாளர் ஆனார்….

Daily Manna 21

கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். ரோமர்:10:9 எனக்கு அன்பானவர்களே! நம்முடைய அருமை இரட்சகரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு முறை பில்லி கிரகாம் அவர்கள் இரட்சிப்பைக் குறித்து ஒரு உதாரணத்தின் மூலமாக விளக்கினார். அவர் சொன்னது, ‘அநேகர் நான் கர்த்தரை விசுவாசிக்கிறேன், வேதாகமத்தை விசுவாசிக்கிறேன், சபை கூடுதலை விசுவாசிக்கிறேன் இது போதாதா நான்…

Daily Manna 20

உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். 1 கொரி:1:28 அன்பானவர்களே! குறைகளை நிறைவாக்கி நம்மை நடத்தி வருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நம்மை அளவில்லாமல் நேசிக்க இயேசு கிறிஸ்துவை விட மேலான தெய்வம் எங்கும் இல்லை என்றே சொல்லலாம். இன்று அநேகம் பெற்றோர் விசாரிப்பற்று கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறார்கள். சில பிள்ளைகள் அனாதைகளைப் போல காணப்படுவதையும், திருமணம் முடித்த எத்தனையோ சகோதரிகள் கண்ணீரோடு விசாரிப்பற்று…