Daily Manna 163

நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; எபிரேயர்: 13:5.

நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்;
எபிரேயர்: 13:5.
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
எனக்கு அன்பானவர்களே!

திருப்தியாய் நம்மை நடத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

உலகத்தில் பிறந்த எந்த மனிதனுக்கும் ஆசைகள் உண்டு. ஆசையே இல்லை என்று சொல்லும் மனிதர்களை பார்க்க முடியாது.

இங்கு ஒரு பிச்சைக்காரன். ஆலய வாசலில் உட்கார்ந்து பிச்சையெடுப்பது வழக்கம். நல்ல குரல் வளத்துடன் பாடுவான்.
ஒரு நாள் பக்திப் பாடல்களை உருக்கமாக பாடிக் கொண்டிருந்தான்.

மகிழ்ந்து போன கடவுள் அவன் முன் தோன்றினார். .
‘பக்தா!
உன் பக்தி என்னை கவர்ந்தது. உனக்கு ஏதாவது வரம் தர விரும்புகிறேன். என்ன வேண்டும் என்று கேள்!’ என்றார் கடவுள்.
பிச்சைக்காரனுக்கு ஒரே மகிழ்ச்சி.
‘கடவுளே மிக்க நன்றி.

என்னுடைய வேண்டுதல் இன்று தான் பலித்திருக்கிறது. நீங்கள் இரண்டு வரங்கள் அளிக்க வேண்டும்’ என்று வேண்டினான் பிச்சைக்காரன்.
‘சரி. தருகிறேன்’ என்றார் கடவுள்.

‘எனக்கு இந்த பிச்சைக்கார வாழ்க்கை வெறுத்துப் போய் விட்டது. அதனால், முதலாவது வரத்தினால் என்னை இந்த நாட்டிலேயே மிகப் பெரிய பணக்காரனாக மாற்றி விடுங்கள்’ என்று கேட்டான்.
‘அப்படியே ஆகட்டும்.

இரண்டாவது வரத்தை கேள்’ என்றார் கடவுள். ‘கடவுளே! இத்தனை காலம் எல்லோரும் பணக்காரர்களாக இருந்தார்கள். நான் ஏழையாக இருந்தேன். அதனால், இரண்டாவது வரத்தினால், இந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஏழையாக்கி விடுங்கள்’ என்று கேட்டான்.
கடவுள் சிரித்துக் கொண்டே, ‘அப்படியே ஆகட்டும்’ என்று சொன்னார்.

பிச்சைக்காரனுக்கு அளவில்லா மகிழ்ச்சி. கடவுளுக்கு நன்றி தெரிவித்தான்.
‘பக்தா! நீ கேட்ட வரங்களை வழங்கி விட்டேன். ஆனால் ஒரு நிபந்தனை. இந்த வரங்கள் பத்து நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். நாளை காலை விடியும் போது நீதான் இந்த நாட்டின் பெரிய பணக்காரன்’ என்று சொல்லி விட்டு மறைந்தார் கடவுள்.

‘பத்து நாட்களுக்கு மட்டும் வரம் கொடுக்கும் இவரெல்லாம் ஒரு கடவுளா’ என்று வருத்தப்பட்டுக் கொண்டே நகர்ந்தான். இருந்தாலும் அவனுக்கு மகிழ்ச்சி.
அன்று இரவு முழுவதும் தூங்கவேயில்லை. சில்லறைக் காசுகளை சேமித்து வைக்கும் பெட்டியை திறந்து பார்த்தான். பத்து செப்புக்காசுகளே இருந்தது.

‘இன்றோடு நம் பிரச்னைகள் தீர்ந்தது. விடிந்ததும் பெட்டி நிறைய தங்கக் காசுகள் நிரம்பி வழியப் போகிறது. வசதியான வீடு ஒன்று வாங்க வேண்டும். குதிரையும், தேரும் வாங்க வேண்டும்’ என்றெல்லாம் கணக்குப் போட்டான். எப்பொழுது விடியும் என்று காத்திருந்தான்.

பொழுது விடிந்தது.
வேகமாக எழுந்து பெட்டியை திறந்து பார்த்தான். அதிர்ந்து போனான். பெட்டியில் முதல் நாள் இருந்த அதே பத்து செப்புக் காசுகளே இருந்தது.
‘கடவுள் நம்மை ஏமாற்றி விட்டாரா?’ என்று யோசித்தவாறு வீட்டுக்கு வெளியே வந்தான்.

நாடெங்கும் ஒரே பரபரப்பு. காரணம், ஒரே நேரத்தில் நாட்டில் இருந்த அனைவரின் பணம், ஆபரணங்கள் ஆகியவை காணாமல் போயிருந்தன. பிச்சைக்காரனுக்கு விஷயம் புரிந்தது. ‘நாட்டில் இருப்பவர்களிடம் ஒரு பைசா கூட இல்லை.

அதனால், பத்து செப்புக்காசுகள் வைத்திருக்கும் தானே பணக்காரன்’.
ஆம், பிச்சைக்காரன் பணக்காரன் ஆனான்.
விடிந்ததும் வீட்டில் பணமழை பெய்யும் என்று நினைத்த பிச்சைகாரனுக்கு வருத்தமே மிஞ்சியது.

தற்போது கிடைத்திருக்கும் இந்த பணக்கார பட்டத்தால் அவனுக்கு எந்த உபயோகமும் இல்லை. கோவில் வாசலுக்கு சென்று பிச்சை எடுக்கவும் வழியில்லை. காரணம் மக்களிடம் பணம் இல்லை.
அவன் யோசிக்கத் தொடங்கினான்.
‘நல்ல வேளை பத்து நாட்களில் மக்களிடம் பணம் வந்து விடும்.

பிறகு நமக்கு பிச்சை கிடைக்கும். ஒரு வேளை இதுவே நிரந்தரமாக இருந்தால் நம் நிலை என்னவாகும்? தப்பித்தேன். கடவுளுக்கு நன்றி’ என்றவாறு பத்து நாட்கள் முடியட்டும் என்று காத்திருந்தான்.

இதே நிலைதான் இன்றைய மனிதர்களிடமும் காணப்படுகிறது.

வேதத்தில் பார்ப்போம்,

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.
1 தீமோத்தேயு: 6 :10.

நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.
1 தீமோத்தேயு :6:11

நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக் கொள்ளும் படி ஆசையாய்த் தொடர்கிறேன்.
பிலிப்பியர்:3:12

பிரியமானவர்களே,

இன்றைய சூழலில் அநேகமாக எல்லா மனிதர்களுக்கும் மிக குறுகிய காலகட்டத்திலே ஐசுவரியவானாக வேண்டும் என்பதே நோக்கமாய் இருக்கிறது.

மனிதர்களாக பிறந்த எல்லாருக்கும் ஆசைகள் உண்டு. ஆனால் அவை பேராசையாகி நம்மை பாவத்தில் தள்ளிவிட வாய்ப்புண்டு. பேராசையினால் நாம் செய்யும் பாவங்கள் நம் சந்ததியையும் பாதிக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்க அழைக்கப்பட்டவர்கள்

பிரியமானவர்களே ஐசுவரியவானாக நாம் பிரயாசப்பட வேண்டாம். ஏனெனில் வேதம் கூறுகிறது ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.

நாம் நம்முடைய பலத்தால் கொஞ்சம் மாத்திரமே சம்பாதிக்க முடியும். ஆனால் கர்த்தரின் ஆசீர்வாதமோ ஐசுவரியத்தை தரும். நம்முடைய தாழ்மைக்கும், கர்த்தருக்கு பயப்படுதலுக்கும் வரும் பலன் தான் ஐசுவரியமும், மகிமையும், ஜீவனுமாம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நாம் நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைப்போம்.

நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், நித்திய ஜீவனைப் பற்றிக் கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் பவுல் நமக்கு கட்டளையிடுகிறார்.

கிறிஸ்தவர்களாகிய நாம் உலகத்தின் ஆசைகளை விட்டு விலகி தேவனை சார்ந்து விசுவாச வாழ்க்கை வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை தந்து தேவன் தாமே நம்மோடு கூட இருந்து நம்மை ஆசீர்வதிப்பாராக.

ஆமென்

  • Related Posts

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    நாவின் அதிகாரம்: வார்த்தைகள் வாழ்க்கையையும் உறவுகளையும் எப்படி மாற்றுகின்றன

    நாவின் அதிகாரம் ஏன் நம்மை எச்சரிக்கச் செய்கிறது? நாவின் அதிகாரம் என்பது ஒரு சிறிய விஷயமாக தோன்றலாம். ஆனால் வேதாகமம் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் காட்டுகிறது. நாம் பேசும் வார்த்தைகள் ஒருவரை உயர்த்தவும் முடியும், அதே நேரத்தில் ஒருவரின் மனதை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God

    Living a Faithful Life: Why Truth Still Matters to God

    Living a Faithful Life: Why Truth Still Matters to God

    Christian Kindness: How the Fruit of the Spirit Changes Everyday Relationships

    Christian Kindness: How the Fruit of the Spirit Changes Everyday Relationships