Cast your burden on the LORD, and he will sustain you

Cast your burden on the LORD, and he will sustain you

கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” சங்.55:22

=========================
எனக்கு அன்பானவர்களே!
நம்மை விசாரித்து வழிநடத்தி வருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

நியூஹெப்ரைட்ஸ் தீவுகளில் ஊழியம் செய்து வந்த ஜான் பேட்டன் எனும் நற்செய்திப் பணியாளர் அந்நாட்டு மொழியில் யோவான் சுவிசேஷத்தை மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார்.

அந்த மொழியில் “விசுவாசம்” என்ற சொல்லுக்கு சரியான வார்த்தையைத் தேடிக் கொண்டிருந்தார். ஆனால் கிடைக்காதபடியால் மொழிப்பெயர்ப்பில் தடங்கல் உண்டாயிற்று. சோர்ந்துபோய் சரியான வார்த்தை கிடைக்கும்படி ஜெபித்துக் கொண்டிருந்தார்.

ஒருநாள் ஒருவர் தொலைவிலிருந்து கரடுமுரடான பாதைகளைத் தாண்டி நடந்து வந்து டாக்டர் பேட்டனுடைய அலுவலகத்தில் மிகுந்த களைப்புடன் உட்கார்ந்தார். அவர் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, எதிரேயுள்ள நாற்காலியை இழுத்து தன் இரண்டு கால்களையும் அதன்மேல் தூக்கி வைத்துக் கொண்டார்.

என் உடல்பாரம் (வலிகள்) முழுவதையும் இந்த இரு நாற்காலிகளில் வைத்துவிட்டேன் என்று சொன்னார். “என் பாரம் முழுவதையும் வைத்திருக்கிறேன்” என்பதற்கு அவர் ஒரு வார்த்தையைப் பயன்படுத்தினார். பேட்டனுக்கு ஒரே சந்தோஷம்! இதுதான் நான் எதிர்பார்த்த வார்த்தை எனத் துள்ளிக் குதித்தார்.
அதை பயன்படுத்தி யோவான் சுவிசேஷத்தை மொழிப்பெயர்த்து முடித்தார்.

ஆம், விசுவாசம் என்றால் நம் பாரம் முழுவதையும் தேவன் மேல் வைத்து விடுவது தான். அவர் மேல் நம்முடைய வாழ்க்கையின் பாரத்தை வைத்துவிட்டால் நாம் எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.

நாம் உண்மையாய் அவரை நேசிக்கும் போது , நம்முடைய தேவைகள் அனைத்தையும் சந்திக்கிறாவராகவே இருக்கிறார். ஏற்ற நேரத்தில் நல் ஆலோசனைகளைக் தந்து நம்மை மகிழ்விப்பவர் நம் அன்பின் ஆண்டவர்.

வேதத்தில் பார்ப்போம்,

உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.
நீதி22 :19.

கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
எரேமியா 17:7.

ராஜா கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருக்கிறார்: உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்.
சங்கீதம் 21 :7.

பிரியமானவர்களே,

நம் அருமை இரட்சகர் நம்மை ஆதரிப்பவர். அவர் நம்மை காண்பவர். நாம் தள்ளாடும்படி ஒருநாளும் தேவன் அனுமதிக்கவே மாட்டார்.

நம்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மோடு கூடவே இருக்கிறார். நாம் அவருடைய சொந்த ஜனங்களாயிருக்கிறபடியால், அவர் நம்மை மிகவும் நேசிக்கிறார்.

அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப் பண்ண வேண்டும் என்றது போல நமது அனுதின ஜெபமும் இருக்கட்டும்.

நமது அன்பான ஆண்டவர் நம்மை தம் உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிற தேவன், நம் பாரங்கள், கவலைகள், வேதனைகள் பிரச்சனைகள் அனைத்தையும் அறிந்திருக்கிறார்.

“அவர் உங்களை விசாரிக்கிறவரான படியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்து விடுங்கள்”
(1பேதுரு 5:7) என்ற வசனத்தின்படி தேவன் மீது நம் பாரங்களை வைத்து விட்டு,

தெளிந்த புத்தியுடன், விழித்திருந்து ஜெபித்து, தேவனை விசுவாசித்து, எதிரியான பிசாசை ஜெயித்து வெற்றியுடன் வாழ்வோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நம் பாரங்களை மாற்றி விசுவாசத்தை வர்த்திக்கப் பண்ணி வெற்றியுள்ள வாழ்வை அருள் செய்வாராக.
ஆமென்

Similar Posts

  • Daily Manna 126

    நன்மை செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும் போது, அதை செய்யத்தக் கவர்களுக்குச் செய்யாமல் இராதே. நீதிமொழி: 3 :27 எனக்கு அன்பானவர்களே! நம் அருமை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு வாலிபன் ஒருநாள் கடற்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்படி அவன் போகும் போது, நிறைய நட்சத்திர மீன்கள் (Star Fish) கரையோரத்தில் ஒதுக்கப்பட்டிருப்பதை கண்டான். ஒவ்வொன்றாக எடுத்து கடலில் தூக்கி போட ஆரம்பித்தான். ஏனெனில் அவை…

  • Daily Manna 31

    கர்த்தர் நன்மையானதைத் தருவார், சங்: 85:12 அன்பானவர்களே! இம்மாதத்தில் கர்த்தர் உங்களை விசேஷ விதமாக ஆசீர்வதித்து உங்களுக்கு நன்மையானதைத் தரப்போகிறார். எனவே சோர்ந்து போகாதிருங்கள். ஒரு சமயம் வாலிபன் ஒருவன் நல்ல வேலைக்காக வெகு நாட்கள் காத்திருந்தார். அவர் காத்திருந்தது வீண்போகாமல் அவர் எதிர்பார்த்தபடியே அவருக்கு நல்லதொரு இடத்தில் இருந்து நேர்முக தேர்வுக்கான அழைப்பு வந்தது. அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி, நேர்முக தேர்வை எதிர்பார்த்து அதற்காக தயாராகி, வெளியூர் செல்ல வேண்டும் என்பதற்காக முன்பதிவில் பயண சீட்டும்…

  • Daily Manna 226

    அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள். ஆதியாகமம்: 19 :26 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். குஜராத்தில் பூஜ் என்ற இடத்தில் சில வருடங்களுக்கு முன் பூகம்பம் ஏற்பட்டு வீடுகளெல்லாம் அழிந்து போயின.விழுந்து நொறுங்கிப் போயிருந்தன. அதன் வீடுகளருகே குடிசைப் போட்டு கொண்டு, புழுதியாய் கிடக்கும் வீட்டையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த மக்களின் அவல நிலையை பார்த்த ஒருவர் கூறுகின்றார். அதை பார்க்க அத்தனை…

  • Daily Manna 163

    நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; எபிரேயர்: 13:5. நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; எபிரேயர்: 13:5.÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷எனக்கு அன்பானவர்களே! திருப்தியாய் நம்மை நடத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். உலகத்தில் பிறந்த எந்த மனிதனுக்கும் ஆசைகள் உண்டு. ஆசையே இல்லை என்று சொல்லும் மனிதர்களை பார்க்க முடியாது. இங்கு ஒரு பிச்சைக்காரன். ஆலய வாசலில் உட்கார்ந்து பிச்சையெடுப்பது வழக்கம்….

  • Daily Manna 269

    அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெப ஆலயத் தலைவனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு. மாற்கு :5 :36. எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு அன்பான போதகர் ஒரு கிராமத்தின் வழியே சென்று கொண்டிருக்கையிலே ஒரு பெண் ஓடி வந்து, தன் குழந்தை உடல் நலமின்றி இருப்பதாகவும் நீங்கள் வந்து என் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள். அப்போது போதகர்…

  • Let us receive the peace that Jesus Christ gives us

    Let us receive the peace that Jesus Christ gives us இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. லூக்கா 1:44 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ எனக்கு அன்பானவர்களே! ஆசீர்வாதமான வாழ்த்துதலால் நம்மை ஒவ்வொரு நாளும் மகிழ்விக்கிற இறைமகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருவரையொருவர் சந்திக்கும் போது வாழ்த்துகின்ற நற்பண்பு முற்றிலும் தமிழருக்கே உரித்தான குணமாகும்! வாழ்த்துதலைக் குறித்து ஒருவர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *