Daily Manna 111

அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவஆவியினாலே அவனை நிரப்பினார். யாத் 35 :33.

எனக்கு அன்பானவர்களே!

புதிய ஆசீர்வாதங்களால் நம்மை நிரப்புகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

பல வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தில் வசிக்கும் ஒரு சகோதரியின் சாட்சியைப் பற்றி அறிந்திருப்போம்.

அந்த சகோதரி கேன்சர் நோயினால் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்கள். யாரோ ஒருவர் அவர்களிடம், சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன் அவர்கள் இந்த வழியாக ரயிலில் கடந்து செல்லவிருக்கிறார்.

எனவே ரயில் நிற்கும் அந்த சில நிமிடங்களில் அவரை பார்த்து ஜெபிக்க வேண்டிக் கொள் என கூறினார். ரயில் வந்து நின்றதும், அவள் சென்று ஜெபிக்க வேண்டிக் கொண்டாள்.

சில நிமிடங்கள் ஊழியர் மிகுந்த பாரத்தோடு அந்த பெண்ணுக்காக ஜெபிக்கும் போது, மின்சாரம் போன்ற வல்லமை அந்த சகோதரியைத் தாக்கியதில், அவர்கள் அப்பொழுதே பூரண சுகமடைந்தாள்.

பரிசுத்த ஆவியானவர் அந்த பெண்ணுக்கு மட்டும் விடுதலை கொடுக்கவில்லை .
அவள் குடும்பத்திற்கே விடுதலையான ஒரு சிறந்த வாழ்வைக் கொடுத்தார்.

அப்பெண்ணின் மகன் பஃரைன் தேசத்திலே ஒரு கம்பெனியில் நேர் காணலுக்காக அழைக்கப்பட்டிருந்தான். அவன் இந்தியாவில் 12ம் வகுப்பு வரை தான் படித்திருந்தான். ஆனால் அவன் நேர்காணலுக்கு சென்ற கம்பெனியிலோ அவனை நிர்வாகியாக தேர்வு செய்தனர்.

பிற்பாடு அவன் சொந்தமாக ஒரு கம்பெனி ஒன்றை துவங்கினான். இவ்விதமாக ஆண்டவர் அவர்களை நேசித்து உயர்த்தினார்.

தான் படித்த படிப்பு குறைவாக இருந்தாலும், தேவ ஆவியானவர் தம்முடைய ஞானத்தினால் நிரப்பி நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகமான உயர்த்தினார்.

ஆதி 41:38-ல் யோசேப்பைக் குறித்து, பார்வோன் ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோ? என்று சாட்சி கூறுகிறான்.

“தானியேலுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது” தானியேல் 5:11 என்று ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் ராஜாத்தி தானியேலைக் குறித்து ராஜாவிடம் கூறினாள் என்று வேதம் கூறுகிறது.

இந்த பரிசுத்த ஆவியை நீங்களும் பெற்றுக் கொள்வீர்களானால், தேவனுடைய பார்வையிலும், மனுஷ பார்வையிலும் உங்களுக்கு தயை கிடைக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் உயர்த்தப்படுவீர்கள். தேவன் தாமே உங்கள் மீது தயையும் இரக்கத்தையும் கிருபையும் என்றென்றும் வைத்து உங்களை ஆசீர்வதிப்பார்!

வேதத்தில் பார்ப்போம்,

கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.
நீதி 2 :6.

ஞானத்தைப் பெற்றுக் கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைச் சிநேகிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.
நீதி 19 :8.

அப்படியே ஞானத்தை அறிந்து கொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக் கொண்டால், அது முடிவில் உதவும், உன் நம்பிக்கை வீண் போகாது.
நீதி 24 :14.

பிரியமானவர்களே,

கிருபையும் மனதுருக்கமும் சத்தியமும் நமக்குள் இருந்தால் ஜாதி, இனம்,மதம் வேறுபாடின்றி எங்கும் நீங்கள் தயை பெறுவீர்கள்.

தேவனுடைய ஆவி நமக்குள் இருக்குமானால், நாம் ஞானத்திலும் அறிவிலும் சிறந்து விளங்குவோம்

ஆவியானவரின் வல்லமை உங்களுக்குள் இறங்கும் போது, உங்களுடைய ஆவி ஆத்துமா சரீரத்தில் நீங்கள் சுகத்தையும் புத்துணர்வையும் பெற்றுக் கொள்வீர்கள்.

என்னைக் கண்டடைகிறவர் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.” நீதி 8:35. இன்றைக்கும் சுகமாகாத வியாதியினால் வேதனைப்படுகிறீர்களா?

மனுஷ கண்களிலும், தேவனுடைய கண்களிலும் தயை கிடைக்காமல் தவிக்கிறீர்களா? இன்றைக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு சுகத்தை தரவல்லவர் என்பதை விசுவாசித்து அவரை கண்டடையுங்கள்.

அவர் உங்களை தேவ ஆவியினால் நிரப்புவார். தேவ ஆவியானவர் உங்களை பூரணமாக சுகமாக்கி புதிய ஜீவனை உங்களுக்கு கட்டளையிடுவார்.

நீங்கள் அவருடைய பிள்ளைகளாயிருக்கிறபடியால் அவர் உங்களுக்கு தயையும் நற்புத்தியையும் தந்து உங்களை உயர்த்துவார்.

இன்றைக்கு உங்கள் மீது ஆசீர்வாத மழை பொழிவதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் இந்த நாளின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வீர்கள்.

இந்த புதிய மாதத்தில் புதிய ஆசீர்வாதங்களையும், தேவ ஞானத்தையும், தேவ தயவையும் பெற்று ஆரோக்கியமாக வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.

  • Related Posts

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    நாவின் அதிகாரம்: வார்த்தைகள் வாழ்க்கையையும் உறவுகளையும் எப்படி மாற்றுகின்றன

    நாவின் அதிகாரம் ஏன் நம்மை எச்சரிக்கச் செய்கிறது? நாவின் அதிகாரம் என்பது ஒரு சிறிய விஷயமாக தோன்றலாம். ஆனால் வேதாகமம் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் காட்டுகிறது. நாம் பேசும் வார்த்தைகள் ஒருவரை உயர்த்தவும் முடியும், அதே நேரத்தில் ஒருவரின் மனதை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God

    Living a Faithful Life: Why Truth Still Matters to God

    Living a Faithful Life: Why Truth Still Matters to God

    Christian Kindness: How the Fruit of the Spirit Changes Everyday Relationships

    Christian Kindness: How the Fruit of the Spirit Changes Everyday Relationships