Daily Manna 248

என் வார்த்தை அக்கினியைப் போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா: 23:29

எனக்கு அன்பானவர்களே!

இந்த புதிய மாதத்தின் முதலாவது பரிசுத்த ஓய்வு நாளை காணச் செய்த இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஜார்ஜ் மத்தேசன் என்ற ஆங்கிலேயர் தமது 18-ஆம் வயதில் பார்வைக் குறைவுக்கு ஆளானார். சிறிது சிறிதாக அவரது பார்வை மங்கிக் கொண்டே வந்தது.

ஒருநாள் தனது பார்வை முற்றிலும் இழந்து விடும் என்பதை அவர் தெளிவாக அறிந்து கொண்டார். இதனால் அவர் மணக்க இருந்த பெண், அவரைத் திருமணம் செய்ய விருப்பமில்லாமல், அவருடன் செய்திருந்த தனது திருமண நிச்சயத்தை முறித்துக் கொண்டார்.

1882-ஆம் ஆண்டு ஜுன் மாதம் தனது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்ள, ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரிலுள்ள ஒரு திருச்சபையின் குருமனையில் மத்தேசன் காத்துக் கொண்டிருந்தார்.

அவரது நினைவலைகள் பின்னோக்கி ஓடின; தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண், தன்னுடன் எத்தனை அன்பு,பாசம், நேசத்தை காட்டினாளே, எனக்கே தெரியாமல் எனக்கு வந்த குறைபாடு எண்ணி இப்போது தன்னை விட்டுப் பிரிந்து போனதையும், தன்னுடைய இதயத்தை சம்மட்டியால் சுக்குநூறாக நொறுக்கி விட்டதையும் எண்ணிப் பார்த்தார்.

ஆனால் தன்னை விட்டு என்றுமே நீங்காத அக்கினி மயமான தேவனின், அன்பு, தனது இதயத்தை அவர் என்றுமே நொறுக்கமாட்டார் என்பதையும் நினைத்து,ஓர் அழகிய கவிதையை அங்கே எழுதினார்.

அது புகழ்பெற்று இன்றும் திருச்சபைகளில் பாடப்படுகிறது.

“அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;
தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர் பிரவாக அன்பில் பாய்ந்தென்றும் ஜீவாறாய்ப் பெருகும்”

இந்த தேவனின் அன்புக்கு ஈடான அன்பு இவ்வுலகில் வேறேதும் உண்டோ??? என்று கேள்வி எழுப்புகின்றார்.

வேதத்தில் பார்ப்போம்,

பூமியின் மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
லூக்கா: 12:49

என் வார்த்தை அக்கினியைப் போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா: 23:29

நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சகரியா :2 :5.

பிரியமானவர்களே,

நம் வாழ்க்கையில் எத்தனை எத்தனை துன்பங்கள் வந்தாலும், எண்ணற்ற துயரங்கள் நம்மை நேரிட்டாலும், தேவனை நாம் முழுமையாக நம்பும் பொழுது,

எருசலேமைச் சுற்றிலும் அக்கினி மதிலாய் இருப்பேன் என்றவர், உங்களைச் சுற்றிலும், உங்கள் பிள்ளைகளைச் சுற்றிலும், உங்கள் குடும்பங்களைச் சுற்றிலும், மதிலாய் இருப்பார்.

அக்கினி ஸ்தம்பம் பார்வோனையும் அவன் சேனையையும் இஸ்ரவேல் ஜனங்களை நெருங்க விடாமல் காத்தது போல, சத்துருவின் கிரியைகள் உங்களைத் தொடாதபடி கர்த்தருடைய அக்கினி உங்களைக் காக்கும்.

நம்முடைய தேவன் அக்கினமயமானவர். அவருடைய கண்கள் அக்கினி ஜீவாலை (வெளி. 1:14, 2:18), அவருடைய முகம் வல்லமையாய் பிரகாசிக்கிற சூரியனைப் போன்றது
(வெளி. 1:16),

அவருடைய முழுச்சரீரம் அக்கினி (எசேக்கியேல்:1:27), அவருடைய சிங்காசனம் அக்கினியாய் காணப்படுகிறது, அக்கினி நதி அதிலிருந்து புறப்பட்டு வருகிறது (தானி:7:9).

அக்கினி மயமான தேவனின் பிள்ளைகள் அக்கினியாகக் காணப்பட வேண்டும் என்பது தான் அவருடைய விருப்பம்.

பழைய ஏற்பாட்டில் பலி செலுத்தப்பட்ட இடங்களில் அக்கினியாக இறங்கி வந்தவர், பெந்தெகோஸ்தே நாளிலிருந்து நம்முடைய இருதயமாகிய பலிபீடங்களில் அக்கினியாய் இறங்குகிறார், அக்கினி மயமான நாவுகளாய் வந்து அமருகிறார்.

கர்த்தருடைய அக்கினி உங்களுடைய பாவத்தின் அழுக்கைச் சுட்டெரிக்க வல்லமையுள்ளது, ஏசாயா பரிசுத்தமுள்ள சேனைகளின் கர்த்தரைக் கண்ட உடனே, நான் அசுத்த உதடுகள் உடையவன், அசுத்த உதடுகள் உள்ள ஜனங்களின் நடுவில் வாசம் பண்ணுகிறேன், ஐயோ அதமானேன், சேனைகளின் கர்த்தரை என் கண்கள் கண்டதே என்று கதறினான்.

உடனே பலிபீடத்திலிருந்து ஒரு நெருப்புத்தழலை எடுத்து வந்து தேவ தூதன், அக்கினி உன் நாவைத் தொட்டதினால் உன் அசுத்தங்கள் விலகினது என்றான். அது போல, அக்கினி சத்துருவின் கிரியைகளை அழிக்க வல்லமையுள்ளது.

இதை வாசிக்கும் அருமையான சகோதரனே, சகோதரியே, கர்த்தரின் வார்த்தை உன் வாழ்வில் வரும் அனைத்து விதமான சோதனைகளிலிருந்தும் உன்னை தூக்கி நிறுத்த வல்லமை உள்ளது.

எனவே ஒரு போதும் தேவனுடைய வார்த்தையை அலட்சியப்படுத்தி, அசட்டை செய்து விடாதேயுங்கள். அவருடைய வார்த்தைகள் மிகுதியான ஆற்றல் உடையது.

அவருடைய வார்த்தைகள் அக்கினியைப் போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போலும் இருக்கிறது. இந்த வார்த்தைகள் நம்மைக் குணமாக்கி அழிவின் குழிக்கு விலக்கும் ஆற்றல் உடையது.

கர்த்தர் தருகிற வார்த்தைகளை விசுவாசித்து, அவருக்கு பிரியமுள்ளவர்களாய் வாழ கர்த்தர் தாமே இந்த ஓய்வு நாளில் நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.

 

Similar Posts

  • Death and life are in the power of the tongue

    மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். நீதிமொழிகள்:18:21 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நாம் பேசும் நல்ல வார்த்தையே நம்மை வாழ்வில் மேலோங்க வைக்கும் என்கிறது பேசும் கலை. நம்மில் அநேகர் இரண்டு வயதுக்குள் பேச கற்றுக் கொள்ளுகிறோம். ஆனால் எத்தனை வயதானாலும் எப்படி பேச வேண்டும் என்று கற்றுக் கொள்ள தெரிவதில்லை. கடுங்காற்று கடலில் பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்துவது…

  • If you believe, you will receive whatever you ask for in prayer.

    If you believe, you will receive whatever you ask for in prayer. நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார் மத்தேயு 21:22. ======================== எனக்கு அன்பானவர்களே! விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நாம் ஜெபிக்கிற ஜெபத்திற்கு ஆண்டவர் பதில் கொடுக்கிறார் என்று நாம் கூறினாலும் சில ஜெபங்களுக்கு பதில் வராத போது உடனே நாம் சோர்ந்து போவதுண்டு….

  • Daily Manna 239

    பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப் பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே. பிரசங்கி: 5 :10 எனக்கு அன்பானவர்களே! திருப்தியாய் நடத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு மனிதன் தனக்கு தெரிந்த ஒரு குருவிடம் வந்து “குருவே, என்னால் சந்தோஷமாகவே இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக்கிட்டே இருக்கு’’ என்றான் வந்தவன். ‘‘அப்படியா?’’‘‘ஆமாம் குருவே. ஆனால், என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப சந்தோஷமா இருக்கான். எந்தக் கவலையுமில்லாம…

  • Daily Manna 249

    அவர் ஜெபம் பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது. லூக்கா :9 :29. எனக்கு அன்பானவர்களே! ஜெபத்திற்கு பதில் தருபவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஹேமில்ட்டர் என்ற வேத கலாசாலையிலிருந்த மூத்த ஊழியரான பாக்கஸ் என்பவர் மரிக்கும் தருவாயில் இருந்தார். மருத்துவர் பாக்கஸை சோதித்து விட்டு, அறையின் வாசலில் நின்று கொண்டிருந்த அவரது நண்பர்களிடத்தில் ஏதோவொன்றை மிக அமைதியாக சொல்லி விட்டு சென்றார். டாக்டர்…

  • As it was in the days of Noah, so it will be at the coming of the Son of Man

    As it was in the days of Noah, so it will be at the coming of the Son of Man நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். மத்தேயு 24 : 37. °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° எனக்கு அன்பானவர்களே! இம்மட்டும் நமக்கு ஜீவனை தந்து, பாதுகாத்து வழிநடத்தி வருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இன்றைய உலகம்…

  • return to the LORD

    Let us test and examine our ways, and return to the LORD! நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக் கடவோம். புலம்பல்: 3:40 ================ அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு தேவ பக்தர், ஆண்டவரையும் அவரது வார்த்தைகளையும் மிகவும் நேசிக்கிறவர். ஒருமுறை அவர் வசித்து வந்த பகுதியில் மழை பெய்து வெள்ளம் வந்தது. மக்கள் யாவரும் பயந்து வீடுகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *