Daily Manna 264

இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான்: 14 :6. எனக்கு அன்பானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு போதகர் இவ்வாறாக கூறுகின்றார். அருமையான ஒரு மகனை அறிவேன். அவர் பக்தி நிறைந்த மகனாகவும், திடகாத்திரமான சரீரத்தோடும், பார்ப்பதற்கு அழகிய தோற்றத்தோடும் இருப்பார். அவர் நலமான படிப்பைப் படித்து நல்ல ஒரு அரசாங்க உத்தியோகத்தில் பணியாற்றுகிறவராய் இருந்தார். கை நிறைய சம்பளம்….

Daily Manna 263

ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள்: நான் என் நாச்சியாராகிய சாராயை விட்டு ஓடிப்போகிறேன் என்றாள். ஆதியாகமம்: 16:8 எனக்கு அன்பானவர்களே!இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். அண்மையிலே செய்தித்தாளிலே ஒரு செய்தியை நான் பார்த்தேன். ஒரு தாயாருக்கு அநேக பிள்ளைகள் இருந்தார்கள். தன் கணவன் மரித்தப் பின்பு,அந்தக் பிள்ளைகளை மிகவும் சிரமப்பட்டு வளர்த்து ஆளாக்கினார். எல்லோரையும் நல்ல படிக்க வைத்து, வேலை எடுத்துக் கொடுத்து,…

Daily Manna 262

அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்து போம். மத்தேயு: 24:12 எனக்கு அன்பானவர்களே! அன்பின் இறைவன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். “அன்பின் வழியது உயர்நிலை அஃதில்லார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு” என்கிறது திருக்குறள். இங்கிலாந்து நாட்டின் டார்லிங்டன் நகரில் வாழ்ந்த ஒரு திருடன் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு வீடு திரும்பினான். வீட்டுக்கு வந்த அவனை யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் அவன் மனம் நொந்து…

Daily Manna 261

மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். சங்கீதம்:103:12 எனக்கு அன்பானவர்களே! பரிசுத்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். சார்ல்ஸ் ஸ்பர்ஜன் என்பவர் பிரிட்டீஷ் பிரசங்கியார். அந்த காலத்தில் மைக்ரோபோன் எதுவும் கிடையாது. அதனால் கூட்டத்திற்கு முந்தின நாள் அந்த இடத்திற்கு சென்று, எந்த அளவுக்கு பேசினால் அவரது சத்தம் ஜனங்களுக்கு கேட்கும் என்று சோதனை செய்வார். அப்படி அவர் பேசி…

Daily Manna 260

தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். லூக்கா :14:11 எனக்கு அன்பானவர்களே! நம்மை ஆசீர்வதித்து உயர்த்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு வங்கியில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்த ஒருவர் தன் வாழ்வில் வந்த சோதனையின் நிமித்தம்கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டார். அவர் ஆண்டவருக்காக வாழ தன்னை முழுவதுமாய் அர்ப்பணித்தார். தேவன் தன்னை ஊழியத்துக்கு அழைத்ததால், தான்…

Daily Manna 259

மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார். யாத்திராகமம் 1:21 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நர்ஸ் ( செவிலியர்) என்னும் ஒற்றை வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்களை நாம் கொடுப்பதுண்டு. சிலருக்கு அது ஒரு வேலை. சிலருக்கு அது இலட்சியம். இன்னும் சிலருக்கு அது ஒரு பயிற்சிக் களம். மருத்துவக் கட்டிலில் படுத்திருப்பவர்களுக்கோ அவர்கள் தான் கடவுளின் வாரிசுகள். “ஸ்டெதஸ்கோப் போட்ட தேவதைகளே நர்ஸ்கள்”…