Daily Manna 222

என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப் பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும் படிக்கும்.அவர்களை நீதியின் வழியிலும், நியாய பாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன். நீதிமொழிகள்: 8:20,21

எனக்கு
அன்பானவர்களே!

நன்மைகளின் பாதையில் நம்மை நடத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு பால்காரன் தன் மாட்டிலிருந்து கறந்த பாலை ஒரு குடத்தில் இட்டு அதை தலையில் சுமந்தபடியே அடுத்த ஊருக்கு விற்கப் புறப்பட்டான்.
பாலை விற்றதும் என்ன செய்யலாம் என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தான்.

இப்பாலை விற்று வரும் பணத்தில் ஐம்பது கோழிகள் வாங்குவேன்.
அவற்றை வளர்த்து சந்தையில் அதிக பணத்திற்கு விற்பேன்.

விற்று வந்த பணத்தில் மூன்று அல்லது நான்கு ஆட்டுக் குட்டிகளை வாங்குவேன்.வீட்டின் அருகில் உள்ள புல்வெளியில் அவை மேயும்..அவை வளர்ந்தவுடன் அவற்றை விற்று ஒரு பசுமாட்டை வாங்குவேன்.

அப்போது என்னிடம் பசுமாட்டின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
அதனால் ஒரு குடத்திற்கு பதில் இரு குடத்தளவு பால் விற்க கிடைக்கும்
அது விற்ற பணம் ஏராளமாய் கிடைக்கும்…
அதில் சந்தோஷமாக இருப்பேன்.ஆனந்தக் கூத்தாடுவேன் என தலையில் இருந்த குடத்திலிருந்து கைகளை எடுத்து விட்டுக் குதித்தான்.

தலையில் இருந்த குடம் கீழே விழுந்து பால் முழுவதும் தெருவில் ஆறாய் ஓடியது.
அவனது பேராசை எண்ணங்களால் இருந்ததும் அவனை விட்டு ஓடிப்போகச் செய்தது.
பேராசை பெரு நஷ்டமாய் முடிந்தது.

மனுஷன்
தங்களுடைய சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்து போயிற்று.

வேதத்தில் பார்ப்போம்,

துன்மார்க்கன் தன் உள்ளம் இச்சித்ததைப் பெற்றதினால் பெருமை பாராட்டி, பொருளை அபகரித்துத் தன்னைத் தான் போற்றி, கர்த்தரை அசட்டை பண்ணுகிறான்.
சங்கீதம் :10:3.

உன் வியாபாரத்தினாலும் உன் மகா ஞானத்தினாலும் உன் பொருளைப் பெருகப் பண்ணினாய், உன் இருதயம் உன் செல்வத்தினால் மேட்டிமையாயிற்று.
எசேக்கியேல்:28:5.

அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது, புத்தியாய் நடந்து கொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.
சங்கீதம்:36:3

பிரியமானவர்களே,

மண்ணாசையினாலும், பெண்ணாசையினாலும் ஏற்பட்ட வீழ்ச்சி, ஆதிக்க வர்க்கத்தார்க்கு மட்டுமே. ஆனால், பொருளாசையினால் ஒட்டுமொத்த சமுதாயமே சரிவுப் பாதையில் சரிந்து கொண்டேயிருக்கிறது.

மண்ணாசைக்கும் பெண்ணாசைக்கும் எல்லையுண்டு; பொருளாசைக்கு எல்லையே கிடையாது.
காசு என்ற சொல்லுக்குக் “குற்றம்’ என்றொரு பொருளுமுண்டு.

ஆசை அதிகமாகி அதர்ம வழியிலே அதை நிறைவேற்ற துணிகிறது மனம்.
ஆசை பேராசையாக மாறும்போது, அது ரொம்ப ஆபத்தானது.
ஆசைப்படும் போது ஒரு பொருள் வேண்டும் என்று நினைக்கிறோம்.

அது கிடைத்த பின்னாலும் ஆசை நீங்குவதில்லை. இன்னும் இன்னும் வேண்டும் என்றே தோன்றுகிறது.
அது கிடைக்காத போது விரக்தி, கோபம், பொறாமை என்று பல தீய எண்ணங்களும் அதைத் தொடர்ந்து தீய செயல்களும் செய்ய தோன்றுகின்றன.
ஆசையை[பேராசையை ]ஒழித்தால் நிம்மதியாய் வாழலாம்.

அன்று பால்காரன் கற்பனையில் கூத்தாடியது போலவே இன்றும் நம்மில் அநேகர் தங்கள் சிந்தனைகளினால் இல்லாத (கிடைக்காத) ஒன்றை நினைத்து கற்பனை உலகத்துக்குள் வாழ்ந்து ஆட்டம் போடுகிறார்கள்.

ஒருநாள் பால்காரனுடைய தலையில் இருந்த குடம் கீழே விழுந்து நொறுங்கியது போலவே, நம் நெஞ்சிலிருக்கும் வீணான கற்பனை ஒரு நாள் நொறுங்கிப் போகும்.

உடைவது கற்பனை மட்டுமல்லை நீயும் தான். நிதானத்தோடு நிஜமாய் வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தேடுவோர்க்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. ஆம், கர்த்தரை தேடுவோம் இவ்வுலகில் மகிழ்ச்சியாய் வாழ்வோம்.

கர்த்தர் தாமே தமது ஆசீர்வாதங்களாலும், மனமகிழ்வினாலும் நம்மை நிறைத்து மெய்யான வாழ்வு வாழ நம் யாவருக்கும் அருள் புரிவாராக.
ஆமென்

  • Related Posts

    Death and life are in the power of the tongue

    மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். நீதிமொழிகள்:18:21 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நாம் பேசும் நல்ல வார்த்தையே நம்மை வாழ்வில் மேலோங்க வைக்கும்…

    Daily Manna 243

    கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார். சங்கீதம் :94 :22. எனக்கு அன்பானவர்களே! தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் பதிலளிக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். குடிப் பழக்கத்திற்கு அடிமையாயிருந்த…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Winning Spiritual Battles with Faith and Confidence

    Winning Spiritual Battles with Faith and Confidence

    God’s Presence Gives Rest

    God’s Presence Gives Rest

    Gods Blessings

    Gods Blessings

    AI in Education is Transforming Learning Experiences

    AI in Education is Transforming Learning Experiences

    Harnessing the Power of Wind Energy

    Harnessing the Power of Wind Energy

    The Golden Gate’s Timeless Majesty

    The Golden Gate’s Timeless Majesty