Daily Manna 176

கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் யோசுவா: 1:9.

கலங்காதே,
நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர்
உன்னோடே இருக்கிறார்
யோசுவா: 1:9.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எனக்கு அன்பானவர்களே!

பயங்களை மாற்றி நம்மை பெலப்படுத்துகிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

பேய்வீடு என்று கருதப்பட்ட ஒரு வீட்டை ஒரு சிறுவன் தினமும் வேலை முடிந்து இரவு வேளையில் அந்த வீட்டை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அவன் பயப்பட்டான். அவனது பயத்தைப் போக்கப் பலர் பல யோசனைகள் சொன்னார்கள்.

ஒருவன் மந்திரித்த தாயத்தை கையில் கட்டிவிட்டான். வேறொருவன் வீட்டின் அருகில் ஒரு விளக்கை வைத்தான். இன்னொருவன், “பயம் என்பது பாவம். கடவுளை நம்பு” என்றான். இது நல்ல ஆலோசனை தான். ஆனால் சிறுவனுக்கு இது பயன்படவில்லை.

கடைசியாக ஒருவன் வந்து, ‘பயம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். நீ வா. அந்த வீட்டை நீ கடக்கும் வரை உனக்குத் துணையாக உன்னுடன் வருகிறேன்’ என்றான். இதைக் கேட்டதும் அந்தச் சிறுவனின் பயம் முற்றிலும் நீங்கி விட்டது.

தேவன் யோசுவாவுக்கு இதைத் தான் செய்தார். யோசுவா நாடோடிகள் போன்ற, போர் பயிற்சி இல்லாத ஒரு கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு போருக்கு போனான்.

போர் பயிற்சி பெற்ற இராணுவீரர்ளை எதிர்த்து யுத்தத்துக்குப் போக வேண்டியதிருந்தது. இது எந்த வீரனையும் நடுங்கச் செய்யும்.

ஆனால், தேவன்
யோசுவாவுக்கு ஒரு போர்த் திட்டம் வழங்கினார். “நீ போகுமிடமெல்லாம் நான் உன்னோடு இருப்பேன்” என்று தைரியம் கூறியிருந்தார்.

பயங்கரமான சூழ்நிலைகளில் மட்டும் அல்ல, எல்லா விதமான சூழ்நிலையிலும் நான் உன்னோடு இருப்பேன் என்று ஆண்டவர் வாக்குறுதி கொடுக்கிறார்.

இதே வார்த்தையை தேவன் இன்றைய நாளில் நமக்கும் தருகிறார். ஆம், நாம் போகிற எவ்விடத்திலும் தேவனின் பிரசன்னத்தை நம்மால் உணர முடியும்.

வேதத்தில் பார்ப்போம்,

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை: நான் மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
யோசுவா :1:5

நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய, கர்த்தர் தாமே உன்னோடே கூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்.
உபாகமம் :31:6.

நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
யோசுவா :1:9

பிரியமானவர்களே,

ஆசீர்வாதத்திலேல்லாம் மிகப் பெரும் ஆசீர்வதம் எது? என்றால் கர்த்தர் நம்மோடு இருப்பதே!

உலகத்தின் தெரிந்து கொள்ளுதலுக்கும் தேவனின் தெரிந்து கொள்ளுதலுக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு. சிறந்த மனிதர்களை தெரிந்தெடுத்து பணியில் அமர்த்துவது உலக இயல்பு.

ஆனால் ஒன்றுக்கும் உதவாத குறைவுள்ள மனிதர்களையும் தெரிந்தெடுத்து அவர்களுக்கு போதித்து மகத்தான காரியங்களை செய்ய வைப்பது தான் தேவனின் மகத்தான செயல்.

தேவன் யோசுவாவைப் பார்த்து ‘திகையாதே கலங்காதே’ என்று சொன்னதைப் போல, இன்றும் கர்த்தர் நம்மைப் பார்த்து திகையாதே கலங்காதே என்று சொல்லுகிறார்.

நம்முடைய பெலவீனங்களை நன்கு அறிந்தவர் நம் தேவன். மனிதர்களாகிய நம்மால் எல்லாவற்றையும் செய்ய முடியாது ஆனால் நம்மை பெலப்படுத்துகிற கிறிஸ்து நம்மோடு இருக்கும் போது எல்லாவற்றையும் செய்ய நமக்கு பெலன் தருகிறார்.

நம்முடைய சூழ்நிலைகள் எவ்வளவு எதிர்மாறாகக் காணப்பட்டாலும் சரி, அதினால் நம் உள்ளத்தில் பயமானது காணப்பட்டாலும் சரி, நீங்கள் ஒன்றை மாத்திரம் நினைவில் கொள்ளுங்கள், கர்த்தர் என்னோடே இருக்கிறார்.எந்த சூழ்நிலையிலும் எனக்கு பெலத்தைக் கொடுத்து, அந்த சூழ்நிலையை மேற்கொள்ள எனக்கு உதவி செய்வார் என்று விசுவாசியுங்கள்.

வேதம் சொல்லுகிறது, ‘நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப் போகையில், குதிரைகளையும் இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்’
உபாகமம்:20:1.என்று கூறுவதை பார்க்கிறோம்.

அநேக சூழ்நிலைகளில் நாம் திகைக்கும் பொழுதும், கலங்கும் பொழுதும் அடுத்து நாம் என்ன செய்வது என்று தடுமாறி நிற்கும் போதும், கர்த்தர் சொல்லுகிறார். அவைகளைக் கண்டு நீ பயப்படாதே என்று .

ஏனென்றால் உன்னை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு இரட்சித்த கர்த்தர் அவர். அவர் என்னை ஒருக்காலும் கைவிடார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பிரியமானவர்களே,
இப்படியாக யோசுவாவுக்கு வாக்குப்பண்ணின கர்த்தர்,அதை அவருடைய வாழ்க்கையில் நிறைவேறப் பண்ணினார்.

அதேப் போலவே இந்த நாளிலே இந்த வாக்குத்தத்ததை நமக்கு கொடுத்திருக்கும் கர்த்தர் நமது வாழ்விலும் தடைப்பட்ட எல்லாவற்றையும் நிறைவேறப் பண்ணுவார்.

நாம் எல்லாவற்றிலும் மேன்மையாக இருப்போம். கர்த்தர் நம்மை உயர்த்துவார் என்று விசுவாசித்து ஜெபியுங்கள். கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்‌

யோசுவாவோடு இருந்த தேவன் தாமே நம்மோடும் கூடவே இருந்து இவ்வுலகில் பயமின்றி வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.

Similar Posts

  • Daily Manna 273

    கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்ன போது மகிழ்ச்சியாயிருந்தேன். சங்கீதம் 122:1 எனக்கு அன்பானவர்களே! தமது ஆலயத்தின் சம்பூரணத்தினால் நம்மை நிரப்பி ஆசீர்வதிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு தம்பதியினர் ஒரு ஞாயிற்றுக்கிழமைகாலையில் சோம்பலாக படுத்திருந்தனர். அதில் மனைவி எழுந்து ஆலயத்திற்கு செல்ல புறப்பட ஆரம்பித்தார்கள். ஆனால் கணவரோ எழுந்து புறப்படுகிற வழியாக இல்லை. அப்போது மனைவி, ‘என்னங்க. ஆலயத்திற்கு புறப்படவில்லையா?’ என்று…

  • Daily Manna 271

    என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. சங்கீதம்: 51:3. எனக்கு அன்பானவர்களே! ‌பரிசுத்தமாக்குகிற பரமன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு மனிதர் ஒரு குதிரையை பாசமாக வளர்த்து வந்தார். அந்த குதிரை தன் எஜமான் சொல்வதை கேட்டு அவருக்கு உதவியாக இருந்து வந்தது. ஒரு நாள் அது பின்னால் இருந்த வேலியை எட்டி உதைத்ததினால் அதன் கால்களில் புண் உண்டானது. அதைக்…

  • Daily Manna 275

    மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை. நீதிமொழிகள்:27:21 எனக்கு அன்பானவர்களே! இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். இந்நாட்களில் சோதனைகள் பல ரூபங்களில் நம்மைத் தாக்க நேரலாம்; வியாதியாகவோ, பண கஷ்டமாகவோ, சபலமாகவோ, துன்புறுத்தலின் வடிவிலோ நம்மைத் தாக்கலாம். ஆனால் ஒன்றை மறவாதீர்கள் உங்களுக்கு வரும் சோதனைக் களங்கள் எல்லாம், உங்களுக்கு சாதனைத் தளங்களே! நீங்கள் சோதனைகளை தவிர்க்க நினைத்தால் பல சாதனைகளும் தவிர்க்கப்படும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் இந்த உலகத்தால்…

  • Daily Manna 285

    கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு :6:25 அன்பானவர்களே! கவலைகளை மாற்றி சந்தோஷத்தை அளிக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இன்றைய காலத்தில் கவலை என்பது எல்லோரிடமும் இருக்கும் ஒருவிதமான சொத்து என்பது போல் மாறி விட்டது. அதன் உருவங்கள் மாறலாம். ஆனால் அதன் அழுத்தம் ஒன்றாகவே இருக்கும். கவலையே இல்லாத மனிதர் யாருமே இல்லை. மத்திய கிழக்கு நாடுகள் வனாந்தரமாக இருப்பதால், செடிகள் அந்த மண்ணில் வளருவது கடினம்….

  • I called you a friend

    I called you a friend அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; யோவா 1:14. ======================= எனக்கு அன்பானவர்களே! நல்ல நண்பராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு நாட்டை சேர்ந்த மன்னர் தன் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறியும்படி அடிக்கடி வேஷம் மாறி, மக்களோடு மக்களாக கலந்து எப்படி வாழ்கிறார்கள் என்று கண்டு , கேட்டு அறிவது வழக்கம். ஒரு…

  • Daily Manna 227

    சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு; 2 தீமோத்தேயு:4:1 எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஜார்ஜ் என்ற புகழ்பெற்ற தொழிலதிபர், ஆரம்பித்த கொஞ்ச காலத்திலே செல்வம் பெருக ஆரம்பித்த போது, தனது மனைவி, பிள்ளைகள், ஆண்டவரின் அன்பையும், பாசத்தையும் மறந்து உலகத்தின் பின்னே போனார். நாட்கள் செல்ல செல்ல தனிமை அவரை வாட்டியது.எல்லா செல்வங்களும் இருந்தும், நிம்மதி இல்லாமல் நிலை குலைந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *