Daily Manna 24

இதோ பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். சங்:127:4

அன்பானவர்களே!

ஒரு தம்பதியினர் அநேக வருடங்களாக பிள்ளைகள் இல்லாததால் ஒரு பிள்ளையை எடுத்து வளர்ப்பதற்குத் தீர்மானம் பண்ணி, குழந்தை ஒன்றைத் தேட ஆரம்பித்தனர். மனதுக்குப் பிடித்த மாதிரி குழந்தை அமையாததால், பின்னர் பார்ப்போம் என்று சற்றுக் காலதாமதம் செய்தனர்.

அச்சமயத்தில் அந்த மனைவி தன் மனதை மாற்றிக் கொண்டு, குழந்தையை நான் தத்தெடுக்கவில்லை. தேவனுக்குச் சித்தமானால் நமக்கு ஒரு குழந்தையைத் தரட்டும் என்று காத்திருந்தாள். சிறிது காலங்களில் அவள் கர்ப்பவதியானாள். திருமணமாகி கிட்டத்தட்ட 16 வருடங்களின் பின்னர், தனது நாற்பதாவது வயதில் ஒரு குழந்தைக்கு அவள் தாயானாள். இது அற்புதமல்லவா? பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்.

வேதம், கர்த்தருக்குப் பயந்து அவரது வழிகளில் நடக்கிறவனுக்குக் கிடைக்கும் ஆசிகளைக் குறித்துப் பேசுகிறது. அவற்றில், ‘உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப் போலிருப்பார்கள்’. இதிலிருந்து பிள்ளைகள் கர்த்தரால் வரும் ஆசியே என்பது திட்டவட்டமாகப் புலனாகிறது.

இந்த நவீன உலகில் மருத்துவத்துறை எவ்வளவோ முன்னேறியிருக்கும் காலகட்டத்தில், பிள்ளைகளைக் கர்ப்பத்தில் உருவாக்குவதற்கு எத்தனையோ வழிமுறைகள்
கண்டுபிடிக்கப்பட்டாலும், அவைகள் நூற்றுக்கு நூறுவீதம் பலனளிப்பது கிடையாது.

இதற்குக் காரணம் என்னவாக இருக்கக் கூடும்? கடவுளின் செயலின்றி மனிதனால் எதையும் செய்திட இயலாது என்பதை நாம் உணர்ந்திட வேண்டும். இன்று ஏதாவது ஒரு வியாதி வந்தால் நாம் உடனே மருத்துவரை நாடி ஓடுகிறோம்.
ஆனால், அன்று தன் மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான். கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டு அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரிக்க செய்தார்.

வேதத்தில் பார்ப்போம்,

உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.
உபா: 28:11

ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
லூக்கா: 1:42

பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம். பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.
நீதி:17:6

பிரியமானவர்களே,

நமது பிள்ளைகள் ஆண்டவர் நமக்குத் தந்த ஆசீர்வாதத்தின் ஊற்றுக்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளும் போது தான், அவர்களைத் தேவனுக்குரியவர்களாக வளர்க்க வேண்டும் என்னும் பொறுப்பு நமக்குண்டு என்பதை நம்மால் உணர முடியும்.

நமது பொருட்களை நாம் இஷ்டத்துக்குக் கையாண்டாலும், பிறரின் பொருட்களை நாம் கவனமாகக் கையாளுவதுண்டு. ஏனெனில், அதை உரியவர்களிடம் திருப்பிக் கையளிக்க வேண்டும். இந்த உணர்வு இல்லையேல், அதைப் போட்டு உடைத்து விட்டு உரியவர் முன்பாகத் தலைகுனிய வேண்டியதுதான். அதுபோலவே, நமது பிள்ளைகளும் தேவன் நமக்குத்தந்த ஆசியே. அவர்கள் தேவனுக்கு உரியவர்கள்.

அவர்களை தேவனுக்குரியவர்களாய் வளர்த்து, அவரிடம் கையளிப்பது பெற்றோராகிய நமது பொறுப்பாகும்.

‘அவன் தன் கண்களை ஏறெடுத்து ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு, உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான். அதற்கு அவன்: தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள் என்றான்’ (ஆதி.33:5).

பிள்ளைகளை நமக்கு அருளியவர் யார் என்பதைச் சிந்தித்திருக்கிறோமா? அவர்கள் தேவனுக்கு உரியவர்கள். எனவே அவருக்காய் வளர்ப்போம்.

இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம் என்று ஏசாயா தீர்க்கதரிசி போல நாமும் நம்முடைய பிள்ளைகளை கர்த்தருக்குரியவர்களாய் வளர்க்க நம் அனைவருக்கும் கிருபை செய்வாராக.
ஆமென்

  • Related Posts

    தயவு – கிறிஸ்துவின் இதயத்தின் பிரதிபலிப்பு | Mercy – The Reflection of Christ’s Heart

      ✝️ தயவு — கிறிஸ்துவின் நம்மிடத்திலான அழகிய கனி “எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்;உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது.”— யோபு 10:12 ✨ ஆரம்ப வாழ்த்து எனது அன்பான சகோதரர் சகோதரிகளே,கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்…

    Death and life are in the power of the tongue

    மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். நீதிமொழிகள்:18:21 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நாம் பேசும் நல்ல வார்த்தையே நம்மை வாழ்வில் மேலோங்க வைக்கும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    தயவு – கிறிஸ்துவின் இதயத்தின் பிரதிபலிப்பு | Mercy – The Reflection of Christ’s Heart

    தயவு – கிறிஸ்துவின் இதயத்தின் பிரதிபலிப்பு | Mercy – The Reflection of Christ’s Heart

    Winning Spiritual Battles with Faith and Confidence

    Winning Spiritual Battles with Faith and Confidence

    God’s Presence Gives Rest

    God’s Presence Gives Rest

    Gods Blessings

    Gods Blessings

    Tamil Bible Verse – Videos

    Tamil Bible Verse – Videos

    Finding Rest in the Goodness of the Lord

    Finding Rest in the Goodness of the Lord