Daily Manna 246

ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். ஆதியாகமம் :4:4 ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். ஆதியாகமம் :4:4^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். “காணிக்கை” என்றதுமே அநேகருடைய இருதயத்தில் குழப்பமும், முகத்தில் மாறுதலும் ஏற்படுகின்றது; சபைகளிலும் இது பல கேள்விகளை எழுப்புகிறது. ஆதியிலிருந்தே தேவனுக்குக் காணிக்கை கொடுப்பது என்பது மனிதனுக்குக் குழப்பத்தை ஏற்படுத்திய விஷயமாகவே இருந்து வருகிறது. முதன் முதல் தேவனுக்குக் காணிக்கை கொடுத்தவர்கள் ஆதாமின்…

Daily Manna 245

இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? ஏசாயா 43 :19 எனக்கு அன்பானவர்களே! புதியவைகளை வாழ்வில் நடப்பிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நம்முடைய கர்த்தர் சகலவற்றையும் புதிதாக்குகிறவர். நம்முடைய ஆண்டவர் செய்கிற ஒவ்வொரு காரியமும் எப்போதும் புதிதாகவும், ஆச்சரியமானதாகவும் இருக்கும். ஆகவே தான் அவர் சொல்லுகிறார் நான் வனாந்தரத்தில் வழியையும் அவாந்தரவெளியில் ஆறுகளையும் உண்டாக்குவேன். பொதுவாக வனாந்தரத்தினுடைய மிகக்…

Daily Manna 244

கர்த்தர் காயினை நோக்கி; உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. ஆதியாகமம்: 4:9-10 எனக்கு அன்பானவர்களே! சொந்த இரத்தத்தால் நம்மை மீட்டெடுத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். உலகத்தில் இது வரை எத்தனையோ மகாத்துமாக்கள், அறிஞர்கள் மற்றும் தலைவர்களின் இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது. அதினாலே, ஜனங்களுக்குப் பாவ நிவிர்த்தியோ, எந்த விதமான புண்ணியமோ ஏற்பட்டதில்லை. அதற்குப் பதிலாக பகையும், கலகமும், விரோதங்களும், பிரிவினைகளும் தான் ஜனங்கள்…

Daily Manna 243

உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக. சங்கீதம் :70 :4 எனக்கு அன்பானவர்களே! மனமகிழ்ச்சியை தருகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருவர் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு தொழிற்சாலை ஒன்றை நிறுவினார், ஒரு சில வருடங்களில் பெரிய செல்வந்தனாகி விட்டார். ஆனால் அவருடைய உள்ளத்தில் சந்தோஷமில்லை. எப்பொழுதும் பதட்டமும், தன்னை மற்றவர்கள் ஏமாற்றி விடுவார்களோ என்கிற பயமும் அவரை வாட்டி வதைத்தன. தொழிற்சாலையின் நெருக்கடிகள் அவருடைய இருதயத்தில்…

Daily Manna 242

ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும். நீதிமொழிகள்: 11:14. எனக்கு அன்பானவர்களே! ஆலோசனை கர்த்தராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பிறவியிலே குருடனாயிருந்த ஒரு மனிதனும், அவனது நண்பனும் பாலைவனத்தின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் வேறு வேறு வழிகளில் பயணத்தை ஆரம்பித்தவர்கள். பல மணி நேரத்திற்கு பின் இருவரும் சந்தித்துக் கொண்டவர்கள். அதன் பிறகு இணைந்து பயணம்…

Daily Manna 241

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். எபிரேயர்: 11:6 எனக்கு அன்பானவர்களே! விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு குடும்பத்தினர் நாய் ஒன்றை ஆசையாய் வளர்த்தார்கள். அந்த நாய்க்கு ‘கேப்டன்’ என்று பெயர் சூட்டினார்கள். குடும்பத்தில் ஒருவர் போல அந்த நாயும் இருந்தது. மிகவும் செல்லமாக வளர்த்தார்கள். திடீரென்று அந்தக் குடும்பத் தலைவருக்கு வியாதி வந்து மரித்துப் போனார். எல்லாரும் அழுது புலம்பினார்கள். இந்த நாயை…