• Daily Manna 145

    கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப் பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக. 2 தெசலோனி: 3 :5 எனக்கு அன்பானவர்களே! நீடிய பொறுமையுள்ளவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நாம் அவசரமான ஒரு உலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். எல்லாமே நாம் நினைக்கிற நேரத்தில் உடனுக்குடன் நடைபெற வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்போடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்று வர கொஞ்சம் காலம் தாமதித்தால் உடனே கோபம், முறுமுறுப்புகள்,…

  • Daily Manna 144

    உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும் படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். 1 யோவான்: 1 :4 எனக்கு அன்பானவர்களே! நம் வாழ்வை சந்தோஷத்தால் நிரப்புகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். சந்தோஷம் என்றதும், நம் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதை நாம் நினைக்கிறோம். உலகத்தில் சந்தோஷம் தருபவை எத்தனையோ இருக்கின்றன. பூக்களை பார்க்கும் போது, சிறு குழந்தைகள் நடப்பதை, பேசுவதை பார்க்கும் போது, சூரிய உதயத்தையும், முழு நிலாவையும், பார்க்கும் போது,நம்…

  • Daily Manna 143

    விவேகியானவன் அறிவோடு நடந்து கொள்ளுகிறான், மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். நீதிமொழி: 13 :16. எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். விசுவாச வீரரான ஜார்ஜ் முல்லரிடம் ஒருமுறை வாலிபன் ஒருவன் சென்று ‘உங்கள் ஊழிய வெற்றிக்கு காரணம் என்ன’ என்று கேட்டான். அதற்கு அவர் ‘கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டேன். என் சுயம் மரித்தது. அதுவே என் ஊழிய வெற்றிக்கு காரணம்’ என்றார். அப்போது அந்த வாலிபன்…

  • Daily Manna 142

    என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன். யோவான்:14:2 எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு வழிபோக்கன் ஒருவன் பிரயாணப்பட்டு, வெகு தூரமாய் சென்று கொண்டிருந்தான். இரவு நெருங்கி விட்டது. பகலெல்லாம் அவன் நடந்ததால் அவனுக்கு களைப்பு ஏற்பட்டது. எங்கேயாவது ஓய்வெடுத்தால் நலமாயிருக்கும் என்று அவன் எண்ணினான். சற்று தூரத்தில்…

  • Daily Manna 141

    அந்நாட்களிலே, இயேசு ஜெபம் பண்ணும் படி ஒரு மலையின் மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி: ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். – லூக்கா 6:12. எனக்கு அன்பானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு விமானத்தில் ஆப்ரிக்க கண்டத்திலிருந்து, ஐரோப்பிய கண்டத்திற்கு ஒரு பெரிய பெட்டியில் விஷ பாம்புகளை அடைத்து வைத்து எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அதை அடைத்த மனிதன் பூட்டுப் போட மறந்து விட்டான். விமானம் கீழே…

  • Daily Manna 140

    பட்டணத்தைப் பிடிக்கிறவனைப் பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன். நீதிமொழிகள்: 16:32. எனக்கு அன்பானவர்களே! நீடிய சாந்தமுள்ளவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ரஷ்யாவில் செய்ன்ட் பீட்டர்ஸ்பர்க் என்றொரு நகரம் இருக்கிறது. அதில் ஐசக் என்ற கம்பீரமான பேராலத்திற்கு முன்னால் நாற்சந்தியில் ஒரு அழகான சிலை ஒன்று இருக்கிறது. அது மகா பீட்டரின் சிலை. அது தன் வலது கையை கிழக்கு நோக்கி, உயர தூக்கி சுட்டிக் காட்டுகிற வண்ணமாக…